நான் ஒருபோதும் சூப்பர் முதல்வராக விரும்பியதில்லை-எதியூரப்பா
பெங்களூர் சிவானந்த கெளடாவை முதல்வராக்கி, நான் சூப்பர் முதல்வராக திட்டமிடவில்லை. அந்த எண்ணமே எனக்கு இல்லை என்று கூறியுள்ளார் பதவி விலகியுள்ள கர்நாடக முதல்வர் எதியூரப்பா.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் ஒருபோதும் சூப்பர் முதல்வராக விரும்பவில்லை, அந்த எண்ணமும் இல்லை. எனது ஆதரவாளரை முதல்வர் பதவியில் அமர்த்தி பின்னாலிருந்து செயல்படும் நோக்கமும் இல்லை என்றார் எதியூரப்பா.
கர்நாடகத்தின் அடுத்த முதல்வராக எதியூரப்பாவின்ஆதரவு பெற்ற, அவரது நிபந்தனைப்படி சதானந்த கெளடாவே முதல்வராவார் என்று தெரிகிறது. இதையடுத்து அவருக்குப் பின்னாலிருந்து எதியூரப்பா செயல்படலாம் என்று கருத்து எழுந்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோதுதான் மேற்கண்ட பதிலைக் கூறினார் எதியூரப்பா.
மேலும் அவர் கூறுகையில், கட்சித் தலைவர்களான வாஜ்பாய், அத்வானி, நிதின் கத்காரி போன்றோர் பிறப்பிக்கும் உத்தரவுகளை நான் மதிப்பேன். அப்படித்தான் நான் நடந்து வருகிறேன். அவர்கள்தான் என்னைப் போன்றவர்களை வழி நடத்தி வருகிறார்கள்.
நான் மக்கள் நலனுக்காக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப் போகிறேன். அதைத் தவிர வேறு எனக்கு எந்த தனிப்பட்ட திட்டமும் இல்லை என்றார் அவர்.
மறு பரிசீலனை செய்ய கோரி எதியூரப்பா மனு
இதற்கிடையே, லோக் ஆயுக்தா அறிக்கையை மறு பரிசீலனை செய்யுமாறு கோரி லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே முன்பு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார் எதியூரப்பா.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் என்னை விசாரிக்க வேண்டும் என்ற பரிந்துரையை லோக் ஆயுக்தா மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
இந்த பரிந்துரை, லோக் ஆயுக்தா சட்டத்திற்கு புறம்பானதாகும். மேலும் அறிக்கையில் பல தவறுகளும் உள்ளன.
எனக்கு எதிரான புகார்களுக்கு எந்தவித ஆதாரத்தையும் அறிக்கை குறிப்பிடவில்லை.
மேலும், இந்த அறிக்கையில் உள்ள அனைத்துமே மறு பரிசீலனைக்குரியவைதான்.
அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் என்னை வெகு நாட்களுக்கு துரத்தி வேதனைப்படுத்தும். மேலும் ஆதாரங்கள் இல்லாமல் வெறுமனே குற்றச்சாட்டுக்கள் மட்டும் வைக்கப்பட்டுள்ளதால், எனது தரப்பு நியாயத்தை நிலைநிறுத்த வாய்ப்பளிக்க வேண்டும்.
எனது மனு மீதான விசாரணைக்கு லோக் ஆயுக்தா நாள் குறித்தால் எனது சார்பில் எனது வழக்கறிஞரை அனுப்பி வைக்க முடியும் என்று கூறியுள்ளார் எதியூரப்பா.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications