நான் ஒருபோதும் சூப்பர் முதல்வராக விரும்பியதில்லை-எதியூரப்பா
பெங்களூர் சிவானந்த கெளடாவை முதல்வராக்கி, நான் சூப்பர் முதல்வராக திட்டமிடவில்லை. அந்த எண்ணமே எனக்கு இல்லை என்று கூறியுள்ளார் பதவி விலகியுள்ள கர்நாடக முதல்வர் எதியூரப்பா.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் ஒருபோதும் சூப்பர் முதல்வராக விரும்பவில்லை, அந்த எண்ணமும் இல்லை. எனது ஆதரவாளரை முதல்வர் பதவியில் அமர்த்தி பின்னாலிருந்து செயல்படும் நோக்கமும் இல்லை என்றார் எதியூரப்பா.
கர்நாடகத்தின் அடுத்த முதல்வராக எதியூரப்பாவின்ஆதரவு பெற்ற, அவரது நிபந்தனைப்படி சதானந்த கெளடாவே முதல்வராவார் என்று தெரிகிறது. இதையடுத்து அவருக்குப் பின்னாலிருந்து எதியூரப்பா செயல்படலாம் என்று கருத்து எழுந்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோதுதான் மேற்கண்ட பதிலைக் கூறினார் எதியூரப்பா.
மேலும் அவர் கூறுகையில், கட்சித் தலைவர்களான வாஜ்பாய், அத்வானி, நிதின் கத்காரி போன்றோர் பிறப்பிக்கும் உத்தரவுகளை நான் மதிப்பேன். அப்படித்தான் நான் நடந்து வருகிறேன். அவர்கள்தான் என்னைப் போன்றவர்களை வழி நடத்தி வருகிறார்கள்.
நான் மக்கள் நலனுக்காக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப் போகிறேன். அதைத் தவிர வேறு எனக்கு எந்த தனிப்பட்ட திட்டமும் இல்லை என்றார் அவர்.
மறு பரிசீலனை செய்ய கோரி எதியூரப்பா மனு
இதற்கிடையே, லோக் ஆயுக்தா அறிக்கையை மறு பரிசீலனை செய்யுமாறு கோரி லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே முன்பு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார் எதியூரப்பா.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் என்னை விசாரிக்க வேண்டும் என்ற பரிந்துரையை லோக் ஆயுக்தா மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
இந்த பரிந்துரை, லோக் ஆயுக்தா சட்டத்திற்கு புறம்பானதாகும். மேலும் அறிக்கையில் பல தவறுகளும் உள்ளன.
எனக்கு எதிரான புகார்களுக்கு எந்தவித ஆதாரத்தையும் அறிக்கை குறிப்பிடவில்லை.
மேலும், இந்த அறிக்கையில் உள்ள அனைத்துமே மறு பரிசீலனைக்குரியவைதான்.
அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் என்னை வெகு நாட்களுக்கு துரத்தி வேதனைப்படுத்தும். மேலும் ஆதாரங்கள் இல்லாமல் வெறுமனே குற்றச்சாட்டுக்கள் மட்டும் வைக்கப்பட்டுள்ளதால், எனது தரப்பு நியாயத்தை நிலைநிறுத்த வாய்ப்பளிக்க வேண்டும்.
எனது மனு மீதான விசாரணைக்கு லோக் ஆயுக்தா நாள் குறித்தால் எனது சார்பில் எனது வழக்கறிஞரை அனுப்பி வைக்க முடியும் என்று கூறியுள்ளார் எதியூரப்பா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications