Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கினால் கச்சத்தீவு சென்று கொடியேற்றுவோம்- பாஜக

Subscribe to Oneindia Tamil

Pon Radhakrishnan
நாகப்பட்டனம்: இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்களைத் தாக்கி வந்தால், கச்சத்தீவுக்குச் சென்று அங்கு தேசியக் கொடியை ஏற்றும் போராட்டத்தை நடத்துவோம் என்று தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் நாகையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழக மீனவர்களை தாக்குவதை கண்டித்து ராமேஸ்வரத்தில் பா.ஜ.க, சார்பில் கடல் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. இதன் பிறகும் இலங்கை தமிழக மீனவர்களை தாக்கினால் கச்சத்தீவில் தேசிய கொடி ஏற்றுவோம்.

தமிழக மீனவர்கள் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டிற்கு பா.ஜ.க, சார்பில் கண்டனம் தெரிவித்து கொள்கிறோம்.

தமிழக அரசு சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனறு வேண்டுகோள் விடுக்கின்றோம். தற்போது மாணவர்களின் காலாண்டு தேர்வு கேள்விக் குறியாகியுள்ளது.

10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு பாதிக்கப்படும். 3 மாதம் தமிழக அரசை விமர்சனம் செய்யக்கூடாது என முடிவு செய்துள்ளோம். எனவே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்பதை வேண்டுகோளாக விடுக்கின்றோம் என்று அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+