தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கினால் கச்சத்தீவு சென்று கொடியேற்றுவோம்- பாஜக
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து அவர் நாகையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழக மீனவர்களை தாக்குவதை கண்டித்து ராமேஸ்வரத்தில் பா.ஜ.க, சார்பில் கடல் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. இதன் பிறகும் இலங்கை தமிழக மீனவர்களை தாக்கினால் கச்சத்தீவில் தேசிய கொடி ஏற்றுவோம்.
தமிழக மீனவர்கள் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டிற்கு பா.ஜ.க, சார்பில் கண்டனம் தெரிவித்து கொள்கிறோம்.
தமிழக அரசு சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனறு வேண்டுகோள் விடுக்கின்றோம். தற்போது மாணவர்களின் காலாண்டு தேர்வு கேள்விக் குறியாகியுள்ளது.
10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு பாதிக்கப்படும். 3 மாதம் தமிழக அரசை விமர்சனம் செய்யக்கூடாது என முடிவு செய்துள்ளோம். எனவே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்பதை வேண்டுகோளாக விடுக்கின்றோம் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications