மத்திய இணை அமைச்சர் காந்திசெல்வன் தம்பிக்கு போலீசார் வலைவீச்சு
நாமக்கல்: திமுக மத்திய இணையமைச்சர் காந்திசெல்வன் சகோதரர் சுரேஷ் என்பவர், போலீசார் தன்னை கைது செய்யலாம் என பயந்து தலைமறைவாகி உள்ளனார். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளாவிற்கு விரைந்துள்ளனர்.
திமுக மத்திய இணை அமைச்சரும், நாமக்கல் மாவட்ட தி.மு.க. செயலாளருமாக காந்திசெல்வன் உள்ளார். அவரது தம்பி சுரேஷ், கேபிள் டிவி தொழிலில் செய்து வருகிறார்.
மேலும், ஆகாஷ் என்ற உள்ளூர் சேனலையும் நடத்தி வந்தார். அவரது கேபிள் டிவி அலுவலகம் மற்றும் உள்ளூர் சேனல்(எம்.எஸ்.ஓ), அழகு நகர் குடியிருப்பில் உள்ள, மாவட்ட தி.மு.க. கட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், அரசு கேபிள் டிவிக்கான 18 கி.மீ. தூரம் கொண்ட, 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேபிள் ஒயரை, சுரேஷ் முறைகேடாகப் பயன்படுத்தி, அரசுக்கு இழப்பு ஏற்படுத்தினார்.
இதுகுறித்து நாமக்கல் டவுன் ஆர்.ஐ. ஆனந்தன் அளித்த புகாரின் பேரில், சுரேஷ் மீது, நாமக்கல் போலீசார் வழக்கு பதிந்தனர்.
இதை, முன்கூட்டியே அறிந்த சுரேஷ் தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணக்குமார் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சுரேஷ் தற்போது கேரளாவில் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, தனிப்படை போலீசார் கேரளாவுக்கு விரைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications