உடன்குடி அனல்மின் நிலைய திட்டத்திற்கு ரூ.65 கோடி ஒதுக்கீடு
உடன்குடி: ரூ.9 ஆயிரத்து 83 கோடியில் உருவாக உள்ள உடன்குடி அனல் மின் நிலையத் திட்டத்திற்கு ரூ.65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாநில இந்து முன்னணி துணை தலைவர் பரமன்குறிச்சி ஜெயகுமார் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உடன்குடி பவர் கார்ப்பரேசன் லிமிடெட்டுக்கு 7 கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்து கூடுதல் மேலாளர் மற்றும் பொது தகவல் அலுவலர் அனுப்பிய கடித்ததில் கூறியிருப்பதாவது,
உடன்குடி அனல் மின் நிலையம் ரூ.9 ஆயிரத்து 83 கோடி பொருட்செலவில் அமைக்கப்பட இருக்கிறது. இதுவரை தமிழ்நாடு மி்ன் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும், பாரத் மிகுமின்கழகமும் இணைந்து ரூ.65 கோடி ஓதுக்கீடு செய்துள்ளது. பாய்லர் மற்றும் இதர உபகரணங்கள் பாரத் மிகுமின் கழகத்திடம் இருந்து பெறப்பட இருக்கிறது. இதற்கான ஓப்பந்தம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. நிலக்கரி ஒதுக்கீடு வேண்டி மத்திய அரசிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் ஒதுக்கீடு உறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கு 400 கிலா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு காரைக்குடிக்கும், கயத்தாறுக்கும் எடுத்து செல்லபடவுள்ளது. ஆனால் அதன் ஆய்வு அறிக்கை இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications