ராஜினாமாவை ஏற்காமல் 'எஸ்'- சபாநாயகரைக் காணவில்லை என தெலுங்கானா எம்.எல்.ஏக்கள் புகார்
ஹைதராபாத்: தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கக் கோரி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்தும் அதை ஏற்காமல் சபாநாயகர் மனோகர் வெளிநாடு சுற்றுப்பயணம் போய் விட்டதால் டென்ஷன் ஆன தெலுங்கானா பகுதி எம்.எல்.ஏக்கள் சபாநாயகரைக் காணவில்லை என்று போலீஸில் புகார் கொடுத்து களேரப்படுத்தியுள்ளனர்.
தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கக் கோரி சமீபத்தில் தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா கடிதங்களை சபாநாயகரிடம் வழங்கினர்.
ஆனால் அவற்றை ஏற்க மறுத்து விட்டார் சபாநாயகர் மனோகர். மேலும், குடும்பத்தோடு வெளிநாடு போய் விட்டார். இதுவரை அவர் ஹைதராபாத் பக்கம் திரும்பவேயில்லை.
இதனால் ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்கள் கடுப்பாகி விட்டனர். இந்த நிலையில் நகம் ஜனார்த்தன் ரெட்டி என்ற தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ. சைபராபாத் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், மனோகரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்து ஒரு மாதமாகி விட்டது. அவர் ஏற்கவில்லை. மாறாக வெளிநாடு போய் விட்டார்.
இதுவரை அவர்திரும்பவில்லை. என்ன ஆனார் என்பது தெரியவில்லை. அவரைக் காணவில்லை. எனவே அவரைக் கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
ஆனால் இந்தப் புகாரைப் பெற போலீஸார் மறுத்து விட்டனர்.












Click it and Unblock the Notifications