திஹார் சிறையை போராட்டக் களமாக மாற்றிய அன்னா ஆதரவாளர்கள்-சிறைக்கு வெளியே மாபெரும் ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil

சிறைக்கு வெளியே நேற்று இரவு முதல் அன்னா ஆதரவாளர்கள் கூடத் தொடங்கினர். காந்தியின் சிறிய சிலை, ராட்டினம், மெழுகுவர்த்தி ஏந்தியபடி அவர்கள் போராட்டத்தில் குதித்தனர். சிறை வாயிலுக்கு முன்பு கூடிய இந்தக்கூட்டம் போகப் போக பெரிதானது. இன்றுகாலை ஆயிரக்கணக்கானோர் அங்குகூடியுள்ளனர்.
அன்னாவை விடுதலை செய், மத்திய அரசே உனது பிடிவாதத்தை தளர்த்து என்பது போன்றகோஷங்களை அவர்கள் எழுப்பி வருகின்றனர். மேலும் பலரும் திஹார் சிறையை நோக்கி விரைந்து கொண்டிருப்பதால் அந்த இடத்தி்ல கூடுதல் போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
இப்போராட்டத்தில் கிரண் பேடி, பிரஷாந்த் பூஷன் உள்ளிட்டோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி அன்னா விவகாரம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசியதாகக் கூறப்படுகின்றது.












Click it and Unblock the Notifications