அன்னா ஹசாரே கைது செய்ததை கண்டித்து நாளை கோவையில் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
கோவை: சமூக சேவகர் அன்னா ஹசாரே கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவை காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடக்க உள்ளது.
கோவை ஐந்தாவது தூண் என்ற அமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஊழலுக்கு எதிராக பேராடும் சமூக சேவகர் அன்னா ஹசாரேவை மத்திய அரசு கைது செய்தது கடும் கண்டனத்திற்கு உரிய செயல். ஊழலுக்கு எதிரான ஜன் லோக்பால் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற கோரி நாளை (19ம் தேதி) காலை 8.00 மணி முதல் காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் முன்பு உண்ணாவிரதம் போராட்டம் நடக்க உள்ளது.
இந்த போராட்டத்தில், சமூக சேவர்கள், ஊழல் எதிர்பாரளர்கள், கல்லூரி மாணவ, மாணவியர், அரசு, வணிக, கூட்டமைப்பு, குடியிருப்போர் நலசங்கங்கள், சுயஉதவி குழு, சமூக நல அமைப்பு உட்பட அனைவரும் பங்கேற்க உள்ளனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications