Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சமச்சீர் கல்வியை ஏற்க மறுக்கும் மெட்ரிக் பள்ளிகள்: தவிக்கும் மாணவர்கள்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: தமிழகத்தில் சமச்சீர் கல்வி அமலுக்கு வந்த பிறகும் நெல்லையில் உள்ள ஒரு சில மெட்ரிக் பள்ளிகளில் பழைய பாடதிட்டம பின்பற்றப்பட்டு வருகிறது. அரசு தேர்வு எழுதும் 10-ம் வகுப்புக்கு கூட மெட்ரிகுலேஷன் பாடம் நடத்துவதால் மாணவர்கள், பெற்றோர்கள் செய்வதறியாது தவிக்கின்றனர்.

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவ, மாணவிகளுக்கு சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி துவங்கியது.

மெட்ரிக் பள்ளிகளை பொறுத்தவரை ஆங்கில வழி புத்தகங்களுக்குரிய கட்டணத்தை செலுத்தி அவற்றை பெற்றுக் கொள்ளலாம் அல்லது 26 பதிப்பகங்களில் இருந்து புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம் என அரசு அறிவித்திருந்தது. ஆனால் பல பள்ளிகள் இன்னும் புத்தகங்களைப் பெறவில்லை.

இந்நிலையில் நெல்லையில் உள்ள ஒரு சில மெட்ரிக் பள்ளிகளில் மெட்ரிகுலேஷன் பாடத்தையே தொடர்வதாக புகார் எழுந்துள்ளது. அரசுத் தேர்வு எழுதவிருக்கும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் கூட மெட்ரிகுலேஷன் பாடங்களைத் தொடர்வதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் மாணவர்கள், பெற்றோர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+