நீதிபதியுடன் ஜெயேந்திரர் 'பண பேர' பேச்சு: சங்கரராமன் கொலை வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை!

ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்டோர் மீதான சங்கரராமன் கொலை வழக்கு புதுச்சேரி செஷன்ஸ் கோர்ட்டில் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில், செப்டம்பர் 5ம் தேதி இறுதி விசாரணை நடைபெறவிருந்தது. இந்த நிலையில் சுந்தரராஜன் என்ற வக்கீல் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நலன் மனுவைத் தாக்கல் செய்தார். அதில், சங்கராமன் கொலை வழக்கை விசாரித்து வரும் நீதிபதி ராமசாமியுடன், ஜெயேந்திரர் பேசியுள்ளார். இதுதொடர்பான ஆடியோவை ஒரு தமிழ்த் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
அந்த ஆடியோ உரையாடலில் ஜெயேந்திரர், அவரது உதவியாளர் கெளரி என்ற பெண், இன்னும் இருவர் ஆகியோர் பேசியுள்ளனர். அதில் இன்னும் ஒரு வாரம், பத்து நாட்களில் மீதமுள்ளவற்றையும் கொடுத்து விடுகிறேன், அதுவரை பொறுமையாக இருங்கள் என்று ஜெயேந்திரர் கூறுகிறார்.இதன் மூலம் சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரருக்கும், நீதிபதிக்கும் இடையே ஏதோ உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே சங்கரராமன் கொலை வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதி சுகுணா முன்பு விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதி சுகுணா, இதுகுறித்து விசாரணை நடத்தி 8 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்றத்தின் ஊழல் கண்காணிப்புப் பதிவாளருக்கு உத்தரவிட்டார். மேலும் அதுவரை சங்கரராமன் கொலை வழக்கை விசாரிக்க புதுவை கோர்ட்டுக்கு இடைக்காலத் தடையும் விதித்து உத்தரவிட்டார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications