ஹஸாரேவின் 3 முக்கிய கோரிக்கைகள் ஏற்பு- 13 நாள் உண்ணாவிரதத்தை முடித்தார்

முன்னதாக நேற்று நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. லோக்சபாவிலும், ராஜ்யசபாவிலும் கொண்டு வரப்பட்ட இந்தத் தீர்மானம் உறுப்பினர்களால் மேசைகளைத் தட்டி வரவேற்று நிறைவேற்றப்பட்டது.
அந்தத் தீர்மானத்தில், கீழ்மட்ட அரசு அதிகாரிகளையும் லோக்பால் வரம்புக்குள் இணைப்பது, அனைத்து அரசு அலுவலகங்களிலும் மக்களின் பணிகளை குறித்த காலத்திற்குள் நிறைவேற்றுவது தொடர்பான பட்டியலை வைப்பது, அனைத்து மாநிலங்களிலும் லோக் ஆயுக்தாக்களை நிர்மானிப்பது ஆகியவை கொள்கை அளவில் ஏற்கப்படுகிறது.
மேலும் இந்த தீர்மானத்தை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி வைப்பது என்றும் தீர்மானிக்கப்படுவதாக குறிப்பிடபப்பட்டிருந்தது.
தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடன் அதன் நகலை எடுத்துக் கொண்டு அன்னா சார்ந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்தவரும், மத்திய அமைச்சருமான விலாஸ் ராவ் தேஷ்முக் ராம்லீலா மைதானத்திற்கு விரைந்தார். தீர்மான நகலை அவரிடம் காட்டினார்.
இதையடுத்து அந்த நகலை கூட்டத்தினரிடம் காட்டி இந்திய மக்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது என்று கூறி தனது போராட்டம் வெற்றி பெற்றதை அறிவித்தார் அன்னா ஹஸாரே. மேலும் தனது கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தான் நாளை அதாவது இன்று காலை 10 மணிக்கு உண்ணாவிரதத்தைக் கைவிடுவதாக அவர் அறிவித்தார். அதன்படி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் ஹஸாரே.
தனது போராட்டத்தின் வெற்றி, இந்திய மக்களுக்குக் கிடைத்த வெற்றி என்று பின்னர் அவர் கூறினார்.
மருத்துவமனையில் அனுமதி
உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்ட பின்னர் அன்னா ஹஸாரே கர்கானில் உள்ள மெடிசிட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு உடலில் நீர்ச்சத்து வெகுவாக குறைந்து விட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.அவர் நல்ல ஓய்வில் சில நாட்கள் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
மருத்துவமனையில் 3 அல்லது நான்கு நாட்கள் அன்னா தங்கியிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அன்ன ஹசாரே பற்றிய மேலும் செய்திகள்
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications