ஹஸாரேவின் 3 முக்கிய கோரிக்கைகள் ஏற்பு- 13 நாள் உண்ணாவிரதத்தை முடித்தார்

முன்னதாக நேற்று நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. லோக்சபாவிலும், ராஜ்யசபாவிலும் கொண்டு வரப்பட்ட இந்தத் தீர்மானம் உறுப்பினர்களால் மேசைகளைத் தட்டி வரவேற்று நிறைவேற்றப்பட்டது.
அந்தத் தீர்மானத்தில், கீழ்மட்ட அரசு அதிகாரிகளையும் லோக்பால் வரம்புக்குள் இணைப்பது, அனைத்து அரசு அலுவலகங்களிலும் மக்களின் பணிகளை குறித்த காலத்திற்குள் நிறைவேற்றுவது தொடர்பான பட்டியலை வைப்பது, அனைத்து மாநிலங்களிலும் லோக் ஆயுக்தாக்களை நிர்மானிப்பது ஆகியவை கொள்கை அளவில் ஏற்கப்படுகிறது.
மேலும் இந்த தீர்மானத்தை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி வைப்பது என்றும் தீர்மானிக்கப்படுவதாக குறிப்பிடபப்பட்டிருந்தது.
தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடன் அதன் நகலை எடுத்துக் கொண்டு அன்னா சார்ந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்தவரும், மத்திய அமைச்சருமான விலாஸ் ராவ் தேஷ்முக் ராம்லீலா மைதானத்திற்கு விரைந்தார். தீர்மான நகலை அவரிடம் காட்டினார்.
இதையடுத்து அந்த நகலை கூட்டத்தினரிடம் காட்டி இந்திய மக்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது என்று கூறி தனது போராட்டம் வெற்றி பெற்றதை அறிவித்தார் அன்னா ஹஸாரே. மேலும் தனது கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தான் நாளை அதாவது இன்று காலை 10 மணிக்கு உண்ணாவிரதத்தைக் கைவிடுவதாக அவர் அறிவித்தார். அதன்படி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் ஹஸாரே.
தனது போராட்டத்தின் வெற்றி, இந்திய மக்களுக்குக் கிடைத்த வெற்றி என்று பின்னர் அவர் கூறினார்.
மருத்துவமனையில் அனுமதி
உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்ட பின்னர் அன்னா ஹஸாரே கர்கானில் உள்ள மெடிசிட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு உடலில் நீர்ச்சத்து வெகுவாக குறைந்து விட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.அவர் நல்ல ஓய்வில் சில நாட்கள் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
மருத்துவமனையில் 3 அல்லது நான்கு நாட்கள் அன்னா தங்கியிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அன்ன ஹசாரே பற்றிய மேலும் செய்திகள்
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications