சென்னை மெரீனா கடற்கரையில் அன்னா ஹஸாரே ஆதரவாளர்கள் பிரமாண்ட பேரணி
Subscribe to Oneindia Tamil
சென்னை: அன்னா ஹஸாரேவின் உண்ணாவிரதம் வெற்றி பெற்றதைத் தொடர்நது டெல்லி, சென்னை உள்பட நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை அவரது ஆதரவாளர்கள் பிரமாண்டப் பேரணிகளை நடத்தினர்.
சென்னை மெரீனா கடற்கரையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பேரணி நடந்தது. மெரீனா கடற்கரை காந்தி சிலையிலிருந்து இந்தப் பேரணி கிளம்பியது. உழைப்பாளர் சிலையில் போய் பேரணி முடிவடைந்தது.
தேசியக் கொடிகளுடனும், மகாத்மா காந்தி, அன்னா ஹஸாரே ஆகியோரது புகைப்படங்களுடனும் பெரும் திரளானோர் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர்.
ஊழலுக்கு எதிராகவும், அன்னாவை வாழ்த்தியும் அவர்கள் கோஷமிட்டனர். ஊழல் ஒழிப்பு இயக்கும் இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
டெல்லியில்
இதேபோல டெல்லியில் இந்தியா கேட் பகுதியில் பிரமாண்டமான பேரணியை அன்னா ஆதரவாளர்கள் நடத்தினர். அதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications