தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார்- அமைச்சர்
தென்காசி: தென்காசியில் ரூ.57 லட்சம் செலவில் அரசு தொழிற்பயிற்சி கூட வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு விழா தமிழக கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
2 தொழிற்பயிற்சி வகுப்பறைகளை திறந்து வைத்து அமைச்சர்கள் பேசியதாவது, அமைச்சர் செந்தூர்பாண்டியன் கூறுகையில், வாக்களித்த மக்களின் நம்பிக்கைக்கு மதிப்பளித்து முதல்வர் தினமும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்திட அமைச்சர்களாகிய எங்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை அளித்து 20 மணி நேரம் தினமும் பாடுபடுகிறார். மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு ஓயாமல் உழைக்கும் முதல்வர் அவர்களின் ஆணைப்படி மக்கள் பணியினை தொய்வின்றி செய்து வருகிறோம் என்றார்.
அமைச்சர் செல்லப்பாண்டியன் பேசுகையில், மாணவர்களின் கல்வி திறன் மேலை நாட்டிற்கு இணையாக வழங்க வேண்டி பல்வேறு ஆக்கப் பணிகளை முதல்வர் செய்து வருகிறார். உலக பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தை நோக்கி படையெடுத்து வந்து பணியாளர்களை தேர்வு செய்கிறது. அதற்கு தேவையான அளவு கல்வி தரம் உயர பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தபட உள்ளன. தொழிற்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு யூனிபார்ம், சூ போன்றவைகள் வழங்கபட உள்ளது. தொழிற்கல்வி பாடத்திட்டங்கள் உலக தரத்திற்கு உயர்த்தப்பட உள்ளது. மாணவ, மாணவிகளின் கல்வி தரத்தையும், வாழ்க்கை தரத்தையும், பொருளாதாரத்தையும் உயர்த்திட முதல்வர் தலைமையில் இந்த அரசு தீவிரமாக செயலாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications