லோக்பால் மசோதா- குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலிடம் பிரதமர் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

Manmohan Singh and Prathiba Patil
டெல்லி: லோக்பால் மசோதா தொடர்பாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை நேரில் சந்தித்து பிரதமர் மன்மோகன் சிங் விளக்கினார்.

குடியரசுத் தலைவரை இன்று சந்தித்தார் பிரதமர். அப்போது லோக்பால் மசோதா தொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து அவரிடம் விளக்கினார்.

மேலும் நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் குறித்தும் அவர் விவரித்தார். அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்ததாக குடியரசுத் தலைவர் மாளிகை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

நேற்று நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து இன்று அன்னா ஹஸாரே தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+