வரத்து குறைவு: மிளகாய் வத்தல், நிலக்கடலை விலைகள் அதிகரிப்பு
விருதுநகர்: மிளகாய் வத்தல் விலை குவிண்டாலுக்கு ரூ. 300 வரை அதிகரித்து ரூ.10 ஆயிரத்து 500-க்கு விற்கப்படுகிறது.
தஞ்சை, திருக்கோவிலுர், ஒரத்தநாடு பகுதியில் இருந்து நிலக்கடலை வரவு எதிர்பார்த்த அளவு இல்லாததால் மூட்டை ரூ. 4 ஆயிரத்து 100-ல் இருந்து ரூ. 4 ஆயிரத்து 200 ஆக உயர்ந்துள்ளது. கடலை எண்ணெய் 15 கிலோ டின் ரூ.1,500-ல் இருந்து ரூ.1,520 ஆக உயர்ந்துள்ளது. மலேசியா க்ரூட் பாமாயில் டன் ஆயிரத்து 132 டாலரில் இருந்து ஆயிரத்து 145 டாலராக உயர்ந்துள்ளது.
இந்தோனேஷியாவில் பாமாயில் ஏற்றுமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 15 கிலோ பாமாயில் டின் ரூ. 895-ல் இருந்து ரூ. 930 ஆக உயர்ந்துள்ளது. கடலை பருப்பு விலை உயர்வால் கடலைபுண்ணாக்கு 100 கிலோ ரூ.3,200-ல் இருந்து ரூ.3,250 ஆக உயர்ந்துள்ளது.
ஆந்திரா குண்டூர் மார்க்கெட்டில் ஏசி வத்தல் இருப்பு 17 லட்சம் மூட்டையாக குறைந்துள்ளது. தேவைக்கேற்ப வரத்து இல்லாததால் விலை உயர்ந்து வருகிறது. மொத்த கடைகளில் ஏசி வத்தல் குவிண்டாலுக்கு ரூ.300 விலை உயர்ந்து ரூ.10 ஆயிரத்து 500-க்கும், சங்கரன்கோவில் பகுதியில் புது சம்பா வத்தல் ரூ. 9 ஆயிரத்து 500-க்கும் விற்பனையானது. சில்லரை கடைகளில் ஒரு கிலோ வத்தல் ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications