பேரறிவாளன், முருகன், சாந்தனை காப்பாற்றுங்கள்: ஜெ.வுக்கு தமிழ் மாநில முஸ்லீம் லீக் கோரிக்கை
மதுரை: முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் உயிரைக் காப்பாற்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் எஸ். ஷேக் தாவூத் வேண்டுகோள் வி்டுத்துள்ளார்.
இது குறித்து தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் எஸ்.ஷேக் தாவூத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு வரும் 9-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இந்த உத்தரவு மிகுந்த மனவேதனையையும், மன உளைச்சலையும் தரக்கூடியதாக உள்ளது.
தமிழகத்திலுள்ள தமிழர்கள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அனைவரும் கவலையோடு எதிர்நோக்குகின்ற நிகழ்வாக இது உள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இதுவே அவர்களுக்கு பெரிய தண்டனையாகும்.
இலங்கையில் பல லட்சம் தமிழினம் அழிந்த நிலையில், இந்த மூன்று பேரின் தூக்கு தண்டனையை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
மறப்போம், மன்னிப்போம் என்ற அடிப்படையில் ராஜீவ் காந்தி குடும்ப உறுப்பினர்களே மன்னித்துவிட்ட நிலையில் கொலைக்கு கொலை பரிகாரமாகாது என்ற அடிப்படையிலும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் உயிரைக் காப்பாற்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications