திருப்பூரில் நில மோசடி செய்த வழக்கில் மதுரை மேயரின் கணவர் கைது
மதுரை: திருப்பூரில் நடந்த நில அபகரிப்பு மோசடிப் புகார் தொடர்பாக மதுரை மாநகராட்சி மேயர் தேன்மொழியின் கணவர் கோபிநாதனை திருப்பூர் போலீஸார் கைது செய்து திருப்பூருக்குக் கொண்டு சென்றுள்ளன்ர.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி தாலுகா, புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுப்பிரமணியம், மகாலிங்கம். இவர்களுக்கு அப்பகுதியில் 55.3 ஏக்கர் நிலம் இருந்தது.
திருச்செங்கோட்டைச் சேர்ந்த ஈஸ்வரன் மற்றும் குமார் ஆகியோர் இந்த நிலத்தைப் பார்த்து வாங்க தீர்மானித்தனர். இதையடுத்து ஏக்கருக்கு ரூ. 8.2 லட்சம் என்று பேசி மொத்தம் ரூ. 4.53 கோடிக்கு நிலத்தை வாங்க பேச்சு முடிவானது.
அதன் பின்னர் அட்வான்ஸ் தொகையாக ரூ. 1.3 கோடியை ஈஸ்வரன், குமார் கொடுத்தனர். 3 மாதத்தில் மீதத் தொகையை தருவதாக கூறி ஒப்பந்தம் செய்துள்ளனர். மேலும், 2006 டிசம்பர் 30ம் தேதி கிரையம் செய்வதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. இருப்பினும் இதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மதுரை வந்த அவர்கள் மத்திய அமைச்சர் அழகிரிக்கு நெருக்கமான கோபிநாதனை சந்தித்தனர். இவர் மதுரை மேயர் தேன்மொழியின் கணவர்.
இதையடுத்து கோபிநாதன், தனது மருமகன் ரமேஷ், குருசாமி, அவிநாசி திமுக செயலாளர் சாமிநாதன் ஆகியோருடன் திருப்பூரில் ஒரு லாட்ஜில் ரூம் போட்டு பஞ்சாயத்துப் பேசியுள்ளார். பஞ்சாயத்தின் இறுதியில், மகாலிங்கம், சுப்பிரமணியம் ஆகியோரிடம் இருந்து அந்த நிலத்தை ஈஸ்வரன், குமார் ஆகியோரது பெயருக்கு எழுதி வாங்கிக் கொடுத்துள்ளார். அதேசமயம், நிலத்தின் உண்மையான மதிப்புத் தொகையான ரூ. 5 கோடியை தர மறுத்து விட்டனர். அதாவது அடிமாட்டு விலைக்கு இந்த நிலத்தை வாங்கி விட்டனர்.
அதிர்ச்சி அடைந்த மகாலிங்கமும், சுப்பிரமணியமும் திருப்பூர் போலீஸில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீஸார் 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் நேற்று கோபிநாதனைக் கைது செய்தனர். மற்றவர்களையும் விரைவில் போலீஸார் கைது செய்யவுள்ளனர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications