ஜெயலலிதா அறிவித்த இலவச மிக்சி, கிரைண்டர், பேன், லேப்டாப் திட்டத்துக்கு தடை இல்லை!-உச்சநீதிமன்றம்

முதல்வர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியாக, இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும், அறிவித்திருந்தார்.
தேர்தலில் அமோக வெற்றி பெற்றதும் தனது தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார் ஜெயலலிதா.
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான வருகிற 15-ந் தேதி, ஏழைகளுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்து, இதற்கான நிதி ஒதுக்கீட்டை அளித்தார்.
இதற்கிடையே, தமிழக அரசின் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, லேப்டாப் வழங்கும் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி, தமிழ்நாட்டைச் சேர்ந்த சுப்பிரமணியம் பாலாஜி என்ற வக்கீல் உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.
இதேபோல் கடந்த ஆட்சியின்போது இலவச டி.வி. வழங்கப்பட்டதை எதிர்த்தும் இவர் மனு தாக்கல் செய்து இருந்தார்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில் அரசியல் கட்சிகள் போட்டி போட்டு இலவசங்களை வழங்குவது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்றும், மேலும் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படும் என்றும் கூறி இருந்தார்.
இலவசங்கள் வழங்க தடை இல்லை
இந்த வழக்கு நீதிபதிகள் பி.சதாசிவம், பி.எஸ்.சவுகான் ஆகியோர் அடங்கிய பெஞ்சு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான வக்கீல் வாதாடுகையில், "தமிழக அரசு அறிவித்து இருக்கும் திட்டம் ஏழை மக்களுக்கு பயன் அளிக்கும் திட்டம். இதை பாரபட்சம் இன்றி அமல்படுத்துவோம்'' என்று உறுதி அளித்தார்.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள், தமிழக அரசு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, லேப்டாப் வழங்கும் திட்டத்துக்கு தடை விதிக்க முடியாது என்று கூறினார்கள்.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக 2 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி, தேர்தல் கமிஷன், தமிழக அரசு ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வருகிற 16-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல்












Click it and Unblock the Notifications