தயாநிதிக்கு எதிராக விரைவில் எப்ஐஆர்-ஆதாரமில்லை என்று கூறிய சிபிஐ பல்டி

ஏர்செல் நிறுவனத்தை முன்பு நிர்வகித்து வந்த சிவசங்கரன் சிபிஐ முன்பு ஆஜராகி தயாநிதி மாறனுக்கு எதிராக வாக்குமூலம் அளித்தார். அப்போது தயாநிதி மாறனும், கலாநிதி மாறனும் தன்னை மிரட்டினர், மேக்சிஸ் நிறுவனத்திடம் ஏர்செல்லை விற்குமாறு தயாநிதி நிர்ப்பந்தப்படுத்தினார். இதனால் வேறு வழியில்லாமல் நான் விற்றேன் என்று கூறியிருந்தார்.
ஏர்செல்லை மேக்சிஸ் வாங்கிய பின்னர் அந்த நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் உரிமங்களை படு வேகமாக வழங்கினார் தயாநிதி மாறன். அதற்குப் பிரதிபலனாக சன் டிவி குழுமத்தில் மிகப் பெரிய முதலீடை மேக்சிஸ் செய்தது என்பது குற்றச்சாட்டாகும். இதன் விளைவாகவே அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த சிபிஐ, சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல்செய்த அறிக்கையில், தயாநிதி மாறனுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது. இதனால் சிபிஐ மீதே பலருக்கும் சந்தேகம் வந்தது.
இதை வெளிப்படுத்தும் வகையில் சிபிஐ முறையாக, சரியாக, நியாயமாக விசாரணை நடத்தவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் புகார் கூறினார் மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன்.
இந்த நிலையில் தற்போது சிபிஐ பல்டி அடித்துள்ளது. இதுகுறித்து சிபிஐ தரப்பில் கூறுகையில், நாங்கள் தயாநிதி மாறன் நிரபராதி என்று கூறவில்லை. விரைவில், அனேகமாக இந்த மாத இறுதியில் இந்த வழக்கில், முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
சிவசங்கரன் தலைமையிலான ஏர்செல் நிறுவனத்திற்கு உரிமம் வழங்க தயாநிதி மாறன் ஏன் தாமதம் செய்தார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம். இது வேண்டும் என்றே செய்யப்பட்ட தாமதமா என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டது.
உச்சநீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாக நேரிடும் என்ற எதிர்பார்ப்பால் தற்போது சிபிஐ பல்டி அடித்துள்ளதாக கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications