Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'கிட்னி'யைக் காரணம் காட்டி சிறையில் ஏக சலுகைகளுடன் அமர்சிங் ஏகபோக வாழ்க்கை!

Subscribe to Oneindia Tamil

Amar Singh with Jayapradha
டெல்லி: தனது சிறுநீரகப் பிரச்சினையைக் காரணம் காட்டி திஹார் சிறையில் ஏகப்பட்ட சலுகைகளுடன் ஏக போகமாக, வாழ்ந்து வருகிறாராம் முன்னாள் சமாஜ்வாடிக் கட்சி பொதுச் செயலாளரும், ராஜ்யசபா எம்.பியுமான அமர்சிங்.

லோக்சபாவில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சிக்கி கைதாகி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அமர்சிங்.

ஒரு காலத்தில் டெல்லிக்கே ராஜா போல நடந்து கொண்டவர் அமர்சிங். புகைப்படக்காரர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் பெரும் தீனியாக திகழ்ந்தன இவரது செயல்கள். அப்படிப்பட்ட தன்னையே சிறையில் அடைத்து விட்டார்களே என்று நெஞ்சு குமுறிக் கொண்டிருக்கிறாராம் அமர்சிங்.

இந்த நிலையில்தான் அமர்சிங்கின் வலது மற்றும் இடது கரமான ஜெயப்பிரதா ஒரு பேட்டியை அளித்து காங்கிரஸ் வட்டாரத்தை வயிறு கலங்கச் செய்துள்ளார். அமர்சிங் மட்டும் வாயைத் திறந்தால் பலரும் சிக்கி சிறை செல்ல நேரிடும் என்பது அவரது பேட்டியின் சாராம்சம். இதனால் 'தேளுக்கு தேனீ கொட்டியது' போலாகி விட்டது காங்கிரஸ் தரப்புக்கு.

இந்தப் பின்னணியில்தான் திஹார் சிறையில் அமர்சிங்குக்கு ராஜ போகமாக கவனிப்பு காட்டப்படுவதாக செய்திகள் கசிந்து வருகின்றன.

என்ன வேணும் கேளு ராஜா!

விஐபி கைதியாக அவரைப் பாவித்து ஏகப்பட்ட சலுகைகளை வாரி வழங்குகின்றனராம். அவரும், தனக்கு சிறுநீரக பிரச்சினை இருக்கிறது, இப்போதுதான் புது சிறுநீரகம் பொருத்திக் கொண்டு வந்துள்ளேன். அது 'கெட்டு'ப் போய் விடும் என்றெல்லாம் கோர்ட்டில் கூறியிருப்பதால் கோர்ட் உத்தரவுப்படியும் சில பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாம்.

இதை சாக்காக வைத்துக் கொண்டு திஹார் சிறை அதிகாரிகளிடம் அது வேண்டும், இது வேண்டும், இது இப்படி இருக்க வேண்டும், அது அப்படி இருக்க வேண்டும் என்று நொச்செடுத்து வருகிறாராம். அவரைக் கையாளுவது ரொம்பக் கஷ்டமப்பா என்று புலம்பும் அளவுக்கு அதிகாரிகளை 'வேலை' வாங்கி வருகிறாராம் 'கைதி' அமர்சிங்.

மற்ற கைதிகளுடன் இருந்தால் தனது இமேஜ் என்னாவது என்ற நினைப்பில் அவர் செல்லுக்குள்ளேயே இருப்பதில்லையாம். இதனால் அவருக்கு தனி அறையைக் கொடுத்துள்ளனர். அங்கு டிவி உள்ளது, படுக்கை வசதி உள்ளது, மின்விசிறி கூட உள்ளது. டாய்லெட்டும் அட்டாச்ட்ஆக உள்ளது.

நோய்த் தொற்று ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக ஒரு நாளைக்கு ஐந்துவாட்டி அவரது அறையைத் துடைத்து எடுக்கிறார்களாம். ராத்திரியில் கொசு அடிக்கும் அதாவது கடிக்கும் என்பதால், கொசுவர்த்தி சுருளையும் கொடுத்து வைத்துள்ளனராம்.

இந்தியன் போதுமா, இல்லை வெஸ்டர்ன் வேணுமா?

வீட்டுச் சாப்பாடும் தாராளமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. சிறை கேன்டீனிலும் விருப்பப்பட்டதை வாங்கி சாப்பிடவும் அனுமதித்துள்ளனர். இதை விட உச்சமாக, தேவைப்பட்டால் சொல்லுங்கள், வெஸ்டர்ன் டாய்லட்டையும் ஏற்பாடு செய்து விடுகிறோம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனராம்.

உடல் நலம் சரியில்லாதவர் என்ற அடிப்படையில்தான் இந்த வசதிகளைச் செய்து தருவதாக சிறைத் தரப்பு கூறுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியை மாட்டி விட்டு விடப் போகிறாரே என்ற பயத்தில் மேலிடத்து உத்தரவுப்படி, கோர்ட் உத்தரவுடன் சேர்த்து இவர்களும் பல சலுகைகளை சேர்த்துக் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இருந்தாலும் இருக்கலாம். காரணம், மிகப் பெரிய ஊழல் வழக்கில்சிக்கியவரான சுரேஷ் கல்மாடி, சிறைக் கண்காணிப்பாளர் அறையில் உட்கார்ந்து, கால் மேல் கால் போட்டபடி டீயும், பொறையும், அதாவது பிஸ்கட்டும் சாப்பிட்டு நீதிபதியிடம் கையும் களவுமாக பிடிபட்டது நினைவிருக்கலாம்.

'விஐபி ரிசார்ட்' ஆக மாறிய திஹார் சிறை

தற்போதைய நிலவரப்படி இந்தியாவிலேயே அதிக அளவிலான விஐபிக்கள் இருப்பது திஹார் சிறையில்தான். கனிமொழி, ராசா, சுரேஷ் கல்மாடி, மது கோடா, அமர்சிங் என ஏகப்பட்ட விஐபிக்கள் இங்கு புழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+