கலெக்டர்கள் வரவில்லை: கூட்டத்தை ரத்து செய்து, திரும்பிப் போன ப.சிதம்பரம்
Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தலைமையில் மாவட்ட கண்காணிப்புக் குழு கூட்டம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் பத்திரிக்கையாளர்கள் குவிந்தனர். சரியாக 9. 55 மணிக்கு ப. சிதம்பரம், காங்கிரஸ் மற்றும் திமுக நிர்வாகிகள் வந்தனர்.
அவர்கள் வந்து காத்திருந்தும் மாவட்ட கலெக்டரைக் காணவில்லை. காத்திருந்து கடுப்பானவர்கள் கலெக்டரைப் பற்றி விசாரித்தபோது தான் அவர் திடீர் என்று சென்னை சென்றுவிட்டது தெரிய வந்தது. இதையடுத்து கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
இதே போன்று சிவகங்கை மாவட்டத்தில் சிதம்பரம் தலைமையில் நடக்கவிருந்த கூட்டம் அம்மாவட்ட கலெக்டர் வராததால் ரத்து செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications