அரக்கோணம் ரயில் விபத்து எதிரொலி-7 ரயில்கள் ரத்து
சென்னை: அரக்கோணம் அருகே நடந்த ரயில் விபத்தைத் தொடர்ந்து காட்பாடி ரயில் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. 7 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இன்று காலை சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய கோவை எக்ஸ்பிரஸ், துரந்தோ, பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளன. மறு மார்க்கத்திலும் இவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேபோல திருப்பத்தூர்-சென்னை சென்டிரல் இடையிலான ஏலகிரியும் ரத்து செய்யப்பட்டது. நேற்று இரவு சென்னையிலிருந்து செல்ல வேண்டிய பெங்களூர் மெயில், ஏற்காடு எக்ஸ்பிரஸ் ஆகியவையும் ரத்து செய்யப்பட்டன.
மீட்புப் பணிகள் இன்னும் முழுமையாக முடியவில்லை. அவை முடிந்து ரயில் பாதை சீரானவுடன்தான் ரயில் போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2 ரயில்களின் நேரம் மாற்றியமைப்பு
இதற்கிடையே, 2 ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றியமைக்கபப்பட்டுள்ளது.
அகமதாபாத் செல்லும் நவஜீவன் ரயில் மாலை 5.30 மணிக்கும், வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் மாலை 5.30 மணிக்கும் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications