மதுரையில் தலித்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம்- இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை சிந்தாமணியில், செப்டம்பர் 11ம் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அன்று அந்த இடத்தில் பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் உள்பட 4 இன்ஸ்பெக்டர்கள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

செப்டம்பர் 11ம் தேதி பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் குருபூஜை நடப்பதாக இருந்தது. ஆனால் அன்றைய தினம் ஜான் பாண்டியன் அதிரடியாக கைது செய்யப்பட்டதால் கடும் கோபமடைந்த தலித் மக்கள் பெரும் வன்முறையில் குதித்தனர். இதனால் பரமக்குடி போர்க்களமானது. இதையடுத்து போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்6 பேர் கொல்லப்பட்டனர்.

இதேபோல மதுரை சிந்தாமணி பகுதியிலும் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் அங்கு பணியில் இருந்த அவனியாபுரம் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் மீது குற்றம் சாட்டப்பட்டது. வேண்டும் என்றே அவர் துப்பாக்கிச் சூட்டில் இறங்கியதாக தலித் அமைப்புகள் மற்றும் ஜான் பாண்டியன் ஆகியோர் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில், கஜேந்திரன் இன்று திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவரை நெல்லைக்கு மாற்றி தென் மண்டல ஐஜி ராஜேஷ் தாஸ் உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல இன்ஸ்பெக்டர்கள் சர்க்கரை, ராமகிருஷ்ணன், இளங்கோவன் ஆகியோரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+