2வது நாளாக நரேந்திர மோடி உண்ணாவிரதம்- பெரும் கூட்டம் குவிந்ததால் போலீஸ் தடியடி

Subscribe to Oneindia Tamil

Narendra Modi
அகமதாபாத்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிய மத நல்லிணக்க, அமைதியை வலியுறுத்தும் உண்ணாவிரதம் இன்று 2வது நாளாக தொடர்கிறது. உண்ணாவிரதம் நடந்து வரும் குஜராத் பல்கலைக்கழக மாநாட்டு அரங்கில் பெரும் கூட்டம் கூட்டி நெரிசல் ஏற்பட்டதால் போலீஸார் லேசான தடியடி நடத்தினர். இதில் ஒருவர் காயமடைந்தார்.

மத நல்லிணக்கம், அமைதி உள்ளிட்டவற்றை வலியுறுத்தி குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நேற்று 3 நாள் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர். நேற்று முதல் நாளிலேயே கிட்டத்தட்ட 10 ஆயிரம் பேர் வரை திரண்டு வந்து மோடிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

அத்வானி, அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இதற்குப் போட்டியாக முன்னாள் குஜராத் முதல்வர் சங்கர் சிங் வகேலா தலைமையில் காங்கிரஸாரும் போட்டி உண்ணாவிரதத்தை நேற்று தொடங்கினர்.

இன்றும் மோடியின் உண்ணாவிரதம் நீடித்தது. நேற்றை விட இன்று பெரும் கூட்டம் கூடி விட்டது. இதனால் அவர் உண்ணாவிரதம் இருந்து வரும் குஜராத் பல்கலைக்கழக கூட்ட அரங்கம் நிரம்பி வழிந்தது. இதனால் கூட்ட நெரிசலும் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் லேசான தடியடி நடத்த நேரிட்டது. இதில் ஒருவர் காயமடைந்தார்.

மோடி உண்ணாவிரதம் இருந்து வரும் அரங்கில் பாஜக கொடிகளோ, வாஜ்பாய், அத்வானி உள்ளிட்டோரின் படங்கள் அடங்கிய பேனர்களோ இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+