கூடங்குளம் அணு உலையை மூடினால் பல திட்டங்கள் பாதிக்கப்படும்- ரஷ்யா எச்சரிக்கை
டெல்லி: கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்தும், அணு உலையை மூடக் கோரியும் நடந்து வரும் போராட்டம் கவலை தருகிறது. இது துரதிர்ஷ்டவசமானது. இந்த அணு உலையை மூடினால், இந்தியாவில் ரஷ்யா மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டங்கள் கடும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
கூடங்குளத்தில் ரஷ்யாவின் ஒத்துழைப்புடன் அணு மின் நிலையத்தை நிர்மானித்துள்ளது இந்தியா. இங்கு கட்டப்பட்டுள்ள அணு உலைகள் ரஷ்யாவால் கட்டித் தரப்பட்டவையாகும். திட்டம் நீண்ட காலமாக நிலுவையில் இருந்து முடிவுற்று, உற்பத்தி வருகிற டிசம்பர் மாதம் தொடங்கவுள்ள நிலையில் அணு மின் நிலையத்தை எதிர்த்துப் பெரும் போராட்டம் கிளம்பியுள்ளது.
இதுகுறித்து ரஷ்யா கவலை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ரஷ்ய தூதரகத்தின் மூத்த அதிகாரியான செர்ஜி கர்மலிடோ கூறுகையில்,
தமிழகத்தில் நடந்து வரும் போராட்டம் துரதிர்ஷ்டவசமானது. இது இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினை. இருப்பினும் இந்திய அரசும், இந்திய அணு சக்தித் துறையும் இதற்கு விரைவில் தீர்வு காண்பார்கள் என நம்புகிறோம். அணு உலையால் ஆபத்து என்று மக்கள் பயப்படுவதாக தெரிகிறது. அந்த அச்சத்தைப் போக்க வேண்டிய கடமை இந்திய அரசுக்கும், இந்திய அணு சக்தித் துறைக்கும் உள்ளது. அவர்கள் அதைச் செய்ய வேண்டும்.
இந்த அணு மின் நிலையத் திட்டம் தமிழகத்திற்கு மட்டுமல்ல, தென் இந்தியாவுக்கும், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் முக்கியமானது, அவசியமானது.
புகுஷிமோ அணு உலையைக் காட்டி கூடங்குளம் குறித்து அச்சம் தெரிவிக்கப்படுகிறது. புகுஷிமோவில் உள்ளவை மிகவும் பழமையானவை, நீண்ட காலத்திற்கு முன்பு கட்டப்பட்டவை. ஆனால் கூடங்குளத்தில் கட்டப்பட்டுள்ளவை மிகவும் அதி நவீனமானவை, பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்தவை. புகுஷிமோ சம்பவத்திற்குப் பின்னர் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை இந்தியா கோரியுள்ளது. அதையும் கூட நாங்கள் பரிசீலித்து வருகிறோம். எனவே இந்த அணு உலைகளால் எந்தவகையான பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை.
எனவே புகுஷிமா அணு உலையுடன், கூடங்குளம் அணு உலையை ஒப்பிடுவது பொருத்தமாக இருக்காது. இரண்டுவே வெவ்வேறு தொழில்நுட்பங்களைக் கொண்டவை.
கூடங்குளம் திட்டம் மூடப்பட்டால், அங்கு கட்டப்பட்டுள்ள அணு உலைகளை மூட நேரிட்டால் இந்தியாவில் ரஷ்யா மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டங்கள் அடியோடு பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஆனால் அப்படிப்பட்ட நிலை வராது என்று எதிர்பார்க்கிறோம். இந்தியாவுடனான நல்லுறவிலும் பாதிப்பு ஏற்படாது என்று கருதுகிறோம் என்றார் அவர்.
கூடங்குளம் திட்டம் குறித்து இப்போதுதான் ரஷ்யா முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தை நிறுத்த இந்தியா முடிவு செய்தால், இந்தியாவில் ரஷ்யா மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டங்கள் பாதிக்கப்படும் என அது கூறியுள்ளது, இந்தியாவுக்கு விடுக்கப்பட்டுள்ள மறைமுக எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications