19 ஆண்டுகளுக்கு பின் வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் நீதி கிடைத்தது: சீமான்
சென்னை: வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் 19 ஆண்டுகளுக்கு பிறகு நீதி கிடைத்துள்ளது என சீமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது, வாச்சாத்தி கிராமத்தில் தமிழக வனத்துறை, காவல் துறையினர், வருவாய் துறை அதிகாரிகளின் துணையுடன் நடத்திய அராஜகத்திற்கு 19 ஆண்டுகளுக்குப் பிற நீதி கிடைத்துள்ளது.
முதல்வர்கள் மாநாட்டில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங், நாட்டில் பழங்குடி மக்களின் உரிமைகளைப் பறித்து, அவர்களை துன்புறுத்த குற்ற-நீதி அமைப்பு கருவியாக பயன்படுத்தப்படுகிறது. வனச்சட்டம் அவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது என எடுத்துக் காட்டினார்.
உள்ளாட்சி அமைப்புகளை கட்சி அரசியலில் இருந்து மீட்டால், அதற்கு தீர்வு ஏற்படும். உள்ளாட்சி அமைப்புகளை மக்களே தங்கள் கைகளில் எடுத்து நிர்வகித்தால் தான், தங்கள் அதிகாரத்தை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும். மேலும், தங்கள் வாழ்வு ஆதாரமாக உள்ள நிலம், நீர், வளம் ஆகியவற்றை பாதுகாத்து கொள்ள முடியும். உள்ளாட்சியில் இந்த மாற்றம் வரும் போது, உண்மையான மக்களாட்சி மலரும்.
இந்திய அரசமைப்பும், பஞ்சாயத்து ராஜ் சட்டமும் அளித்துள்ள இந்த ஜனநாயக உரிமைகளை உணர்ந்து மக்கள் தங்கள் கடமையாற்ற வேண்டும். அப்போது சமூக பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்ய முடியும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications