தமிழை ஆட்சி மொழியாக்க குரல் கொடுத்தவர் காயிதே மில்லத்: வைகோ பேச்சு
தென்காசி: தமிழை ஆட்சி மொழியாக்க பாடுபட்டவர் காயிதே மில்லத் என்று இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் 3-ம் ஆணடு மாநில மாநாடு மற்றும் படைப்பிலக்கிய பயிலரங்கத்தின் நிறைவு விழாவில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
தென்காசியில் இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் 3-ம் ஆணடு மாநில மாநாடு மற்றும் படைப்பிலக்கிய பயிலரங்கம் நிறைவு விழா மற்றும் விருது வழங்கும் விழா நடநதது.
இந்த விழாவுக்கு இலக்கிய கழக தலைவர் இதாயத்துல்லா தலைமை வகித்தார். ஹபீப் ரகுமான், தஸ்தகீர், அபுபக்கர், ஜெய்லானி, காதர்பாட்சா, ரசாக், அப்துல் லத்தீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் அப்துல் சமது வரவேற்புரையாற்றினார். ஜஹாங்கீர், முகமது பசீர், பத்ஹூர், ரப்பானி நல்லிணக்க, இலக்கிய விருதுகளை வழங்கினார்கள். கவிக்கோ அப்துல் ரகுமான், சிலம்பொலி செல்லப்பனார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உமறுப்புலவர் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது ஆகியவற்றை வழங்கி பேசியதாவது,
300 ஆண்டு கால தமிழக வரலாற்றில் 500க்கும் மேற்பட்ட பாவலர்களையும், எழுத்தாளர்களையும் இஸ்லாமிய சமுதாயம் வழங்கியிருக்கிறது. தமிழ் மொழியை மட்டுமே ஆட்சி மொழியாக்க வேண்டும். அதற்கான தகுதி உள்ள ஒரே மொழி தமிழ் தான் என குரல் கொடுத்தவர் காயிலே மில்லத்.
சிறுபான்மை சமுதாயத்தின் பாதுகாவல் தான் ஜனநாயகத்தின் அரண் என்பதை எங்களது இயக்கம் எப்போதுமே வலியுறுத்தி வந்துள்ளது. பொது சிவில் சட்டம் கொண்டு வந்தபோது அதனை எதிர்த்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தேன்.
இஸ்லாமியர்களுக்கு இட ஓதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை கொள்கை அளவில் ஏற்றுக் கொண்ட இயக்கம் மதிமுக என்றார்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications