ஓட்டுப் போட்டால்தான் இலவசம் என்று அதிமுகவினர் கூறுகிறார்கள்- பிரேமலதா
Subscribe to Oneindia Tamil
பவானி: அதிமுகவுக்கு ஓட்டுப் போட்டால்தான் தமிழக அரசின் இலவசப் பொருட்கள் கிடைக்கும் என்று அக்கட்சியினர் பிரசாரம் செய்து வருவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் பவானியில் பிரேமலதா பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில்,
அ.தி.மு.க.வுக்கு ஓட்டுப்போட்டால்தான் மக்களுக்கு இலவசங்களை கொடுப்போம் என்று அ.தி.மு.க.வினர் கூறி வருகிறார்கள். இலவசங்கள் அனைத்தும் மக்களின் வரிப்பணத்தில் கொடுப்பது ஆகும். இவை அனைத்தும் உங்களது பணம் ஆகும். இதனால் யார் பொறுப்புக்கு வந்தாலும் இலவசங்களை நிறுத்த முடியாது. கொடுக்காமல் இருக்க முடியாது.
தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. விவசாயிகள், தொழிலாளர்களுக்கு போதுமான ஊதியம் கிடைப்பதில்லை. போதிய தொழில்கள் இல்லை. எனவே தமிழகம் வளர்ச்சி பெறவில்லை என்றார் அவர்.












Click it and Unblock the Notifications