ஆதிதிராவிட எழுத்தாளர்களுக்கு தமிழக அரசு உதவித் தொகை
மதுரை: அரசு உதவித் தொகை விரும்பும் சிறந்த ஆதிதிராவிடர் எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, தமிழக அரசின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுப் பணிக்கான நிதியிலிருந்து 2011-12ம் ஆண்டிற்கான சிறந்த ஆதிதிராவிடர்/ஆதிதிராவிடர் கிருத்துவர்/ பழங்குடியினர் பிரிவை சார்ந்த 10 எழுத்தாளர்களைத் தேர்வு செய்து நிதியுதவி வழங்கப்பட உள்ளது.
மேலும், ஆதிதிராவிடர் பற்றி எழுதும் ஆதிதிராவிடர் அல்லாத ஒருவருக்கும் பரிசு வழங்கப்படும். இதற்கான நூல் வெளியிட 20,000 ரூபாய் வரை நிதியுதவி அளிக்கப்படும். இதற்கு, பெயர், முகவரி, படைப்பின் பொருள் உள்ளிட்ட விவரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு, தமிழக அரசின் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும், அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்திலும் விவரங்களை பெற்றுக் கொள்ளலாம். முறையான விண்ணப்பத்துடன் படைப்புகள் எழுத்து வடிவில் விண்ணப்பதாரரின் கைபேசி எண்களை குறிப்பிட்டு 30.11.2011 தேதிக்குள் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications