ஒரு வார கால மெளன விரதத்தைத் தொடங்கினார் அன்னா ஹஸாரே

Subscribe to Oneindia Tamil

Anna Hazare
ராலேகான் சித்தி: சமூக சேவகர் அன்னா ஹஸாரே, ஒரு வார கால மெளன விரதத்தைத் தொடங்கியுள்ளார். தனது சொந்த கிராமமான ராலேகான் சித்தியில், ஆல மரத்தின் கீழ் அமர்ந்து இந்த மெளன விரதத்தை அவர் இன்று தொடங்கினார். ஆத்ம சாந்திக்காக இதை செய்வதாக அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அன்னாவின் உதவியாளர் தத்தா அவாரி கூறுகையில், இன்று காலை அன்னா தனது மெளன விரதத்தை, பத்மாவதி கோவில் அருகே உள்ள பெரிய ஆலமரத்தின் கீழ் தொடங்கினார். தனது மெளன விரதத்தின்போது அன்னா, குடிலில் தங்கியிருப்பார்.

12 நாள் டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி முடித்து விட்டு ஊர் திரும்பிய பின்னர் பலரும் அன்னாவை சந்தித்துப் பேசினர். இதனால் அவரது உடலில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால்தான் அவர் மெளன விரதம் இருக்க முடிவு செய்துள்ளார் என்றார்.

அன்னா குழுவைச் சேர்ந்த பிரஷாந்த் பூஷன், காஷ்மீர் குறித்து தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தால் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்ரீராம் சேனே அமைப்பைச் சேர்ந்தவர்கள் பூஷனை டெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து கடுமையாக தாக்கினர்.

மேலும் அன்னா குழுவைச் சேர்ந்த அரவிந்த் கேஜ்ரிவால் மீதும் அதிருப்தி அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக அன்னாவிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது, பிரஷாந்த் பூஷன் கருத்து தனது குழுவின் கருத்து ஆகாது என்று விளக்கமளித்தார் அன்னா. இந்த நிலையில் அவர் திடீரென மெளன விரதத்தில் குதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+