தேர்தல் குளறுபடிகள்: தலைமை நீதிபதியிடம் புகார் தரப்பட்டுள்ளது- ஸ்டாலின்
சென்னை: தேர்தல் குளறுபடி குறித்து தலைமை நீதிபதியிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பல இடங்களில் உள்ள வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றியுள்ளதாக அதிமுகவினர் மீது தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. இதனால் மற்ற கட்சிக்காரர்கள் கொதிப்படைந்துள்ளனர். வாக்குப்பதிவில் பல குளறுபடிகள் நடப்பதாக திமுக பொருளாளர் மு. க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
வாக்குப் பதிவில் பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன. ஆளுங்கட்சியினரால் சில வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி போதிய போலீஸ் பாதுகாப்பு போடப்படவில்லை. எந்த வாக்குச்சாவடியிலும் வெப் காமும் பொருத்தப்படவில்லை. தேர்தல் குளறுபடி குறித்து தலைமை நீதிபதியிடம் புகார் தரப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications