இலங்கையிடம் ரூ. 300 கோடிக்கு 80 அதிவேகப் படகுகளை வாங்கும் இந்திய கடற்படை!
Subscribe to Oneindia Tamil

மும்பையில் கடல் மார்க்கமாக ஊடுருவி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து Sagar Prahari Bal என்ற புதிய கடலோர கண்காணிப்புப் பிரிவை கடற்படை உருவாக்கியுள்ளது.
இந்தப் படைக்குத் தான் இலங்கையிடம் அதிவேக படகுகள் வாங்கப்படவுள்ளன. இலங்கையைச் சேர்ந்த SOLAS Marine என்ற நிறுவனத்துக்கு இதற்காக ரூ. 300 கோடி ஆர்டரை இந்தியா தந்துள்ளது.
3 வாரங்களுக்கு முன் இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் 80 படகுகளையும் இந்த நிறுவனம் கடற்படையிடம் வழங்கும்.
ஜூன் மாதத்தில் இதற்காக சர்வதேச டெண்டர்கள் கோரப்பட்டு இலங்கையின் SOLAS Marine நிறுவனத்தை கடற்படை தேர்வு செய்தது. இதற்கு முன் Sagar Prahari Bal பிரிவுக்கு பிரான்சிடமிருந்து அதிவேகப் படகுகள் வாங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications