காரைக்கால் கல்லூரியில் குரங்குத் தொல்லை- கூண்டு வைத்துப் பிடிக்க 2 நாள் லீவு

நிரவியைச் சேர்ந்த மகபுன்னிசா என்ற மாணவி சமீபத்தில் இக்கல்லூரியில் குரங்கு ஒன்று துரத்தியதால் பயந்து ஓடியதில், 2வது மாடியிலிருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
கல்லூரி வளாகத்திற்குள் சுதந்திரமாக சுற்றித் திரியும் குரங்குத் தொல்லையால் ஒரு இளம் மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் காரைக்காலில் பெரும் அதிருப்தியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. மாணவிகளின் பெற்றோர்கள் கல்லூரி நிர்வாகத்தை அணுகி உடனடியாக கல்லூரி வளாகத்திற்குள் உள்ள குரங்குகளைப் பிடிக்க கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து தற்போது குரங்குகளைப் பிடிக்க கல்லூரி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இதற்காக வனத்துறையினரின் உதவி கோரப்பட்டுள்ளது. அவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் 5 இடங்களில் கூண்டுகளை வைத்துள்ளனர். குரங்குகளைப் பிடிக்கும் பணியின்போது மாணவிகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக கல்லூரிக்கு 2 நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதற்குள் அனைத்துக் குரங்குகளையும் பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications