அக் 27, 28ல் தமிழகத்தில் அத்வானி ரத யாத்திரை-மதுரையில் பொதுக் கூட்டம்
ஊழல் மற்றும் வெளிநாடுகளில் குவிக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக தேசிய தலைவர் அத்வானி நாடு முழுவதும் ரத யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
கடந்த 11ம் தேதி பிகாரில் இருந்து துவக்கப்பட்ட இந்த யாத்திரை தமிழக நகரங்களின் வழியாக செல்ல உள்ளதாக, தமிழக பாஜக தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஊழலுக்கு எதிரான அத்வானியின் யாத்திரை தமிழகத்தில் வரும் 27, 28ம் தேதிகளில் நடைபெறும். இதில் 27ம் தேதி பல தமிழக நகரங்கள் வழியாக சென்று மதுரையை அடைந்து, அங்கு பொது கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுவார்.
வரும் 28ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், நெல்லை, கடையநல்லூர், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளின் வழியாக சென்று, பின் கேரளா மாநிலத்தை அடைவார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.