நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு- கோபி கோர்ட்டில் நாளை ஆஜராகிறார் பர்வதம்மா

கடந்த 2000ம் ஆண்டு கன்னட நடிகர் ராஜ்குமார் தனது மனைவி பர்வதம்மாள், மருமகன் கோவிந்தராஜ், உதவியாளர் நாகப்பா மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து தமிழகத்திற்கு வந்தார். ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்துள்ள தனது சொந்த கிராமமான தொட்டகாஜனூரில் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அப்போது தான் சந்தன கடத்தல் வீரப்பன் அவரை கடத்திச் சென்றான்.
108 நாட்கள் காட்டில் வைத்திருந்தபிறகு அவரை வீரப்பன் விடுதலை செய்தான். இது குறித்த வழக்கு கோபி விரைவு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் 94 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட ராஜ்குமார் கடந்த 2006-ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி மரணம் அடைந்தார். அவரைக் கடத்திய வீரப்பனை கடந்த 2004ம் ஆண்டு அதிரடிப்படையினர் சுட்டுக்கொன்றனர்.
இந்நிலையில் அந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. இதையடுத்து நாளை நேரில் ஆஜராகுமாறு ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா, ஈரோடு மாவட்ட கலெக்டர்களாக இருந்த மகேசன் காசிராஜன், பாலச்சந்திரன் ஆகியோருக்கு கோபி விரைவு நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் சம்மன் அனுப்பியுள்ளார்.
இதில் பர்வதம்மா ராஜ்குமார் சம்மனைப் பெற்று நாளை ஆஜராகிறார். அதேசமயம், பாலச்சந்திரனும், காசிராஜனும் தேர்தல் பணியாக முறையே ஈரோடு மற்றும் சென்னையில் உள்ளனர். எனவே அவர்கள் வருவார்களா என்பது தெரியவில்லை.
வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகள் கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தது தொடர்பாக இந்த இரு ஐஏஎஸ் அதிகாரிகளும் கலெக்டர்களாக இருந்தபோது கைது செய்ய உத்தரவு பிறப்பித்திருந்தனர். எனவே இருவரும் அரசுத் தரப்பு சாட்சிகளாக வாக்குமூலம் அளிக்க கோபி கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications