வாக்காளர்களை ரோட்டில் நிற்க வைத்த போலீஸ்- ஓட்டுப் போடாமல் போனார்கள்
அரூர்: அரூர் அருகே கட்டுப்பாடு என்ற பெயரில் போலீசார் வாக்காளர்களை வாக்குச்சாவடிக்குள் நுழையவிடாமல் சாலையில் நீண்ட வரிசையில் நிற்க வைத்ததால் பலர் கடுப்பாகி வாக்களிக்காமலேயே திரும்பிச் சென்றனர்.
தமிழகத்தில் 2வது கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பபதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் அரூர்-பறையப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோ.கூட்டு ரோடு தொடக்கப் பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
ஆர்வமுடன் வாக்களிக்க வந்த மக்களை போலீசார் வாக்குச்சாவடிக்குள் நுழைவிடாமல் சாலையில் வெயிலில் நீண்ட வரிசையில் நிற்க வைக்கின்றனர். ஒருவர் பின் ஒருவராகத் தான் வாக்குச்சாவடிக்குள் செல்ல அனுமதிக்கின்றனர்.
இதனால் வாக்காளர்கள் அதிருப்தி அடைந்தனர். போலீசாரின் கெடுபிடியால் பலர் வாக்களிக்காமலேயே திரும்பிச் சென்றனர். பலர் வந்தது, வந்தாகிவிட்டது என்று வரிசையில் நின்று வாக்களித்துவிட்டுச் சென்றனர்.












Click it and Unblock the Notifications