போட்டி வேட்பாளர் 11 ஓட்டுக்களில் வென்றதால்- ஓ.பன்னீர்செல்வம் வீட்டை நொறுக்கிய அதிமுகவினர்

போடிநாயக்கனூர் நகராட்சித் தலைவர் தேர்தலில் முதலில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் பழனிராஜ். பின்னர் அவரை மாற்றிய கட்சித் தலைமை பாலமுருகன் என்பவரை வேட்பாளராக அறிவித்தது. இதையடுத்து பழனிராஜ் போட்டி வேட்பாளராக களம் குதித்தார்.
இந்த நிலையில், தலைவர் தேர்தலில் பாலமுருகன் 9714 வாக்குகளைப் பெற்றார். ஆனால் பழனிராஜ் 9725 வாக்குகளைப் பெற்று, வெறும் 11 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று விட்டார்.
இதனால் பாலமுருகனின் ஆதரவாளர்கள் கடும் ஆத்திரமடைந்தனர். பாலமுருகன் தோற்க, அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் செய்த உள்ளடி வேலைகள்தான் காரணம் என்று குற்றம் சாட்டிய அவர்கள் போடியில் உள்ள பன்னீர் செல்வத்துக்குச் சொந்தமான வீடு மற்றும் அலுவலகத்திற்குப் படையெடுத்துச் சென்று அதிரடித் தாக்குதலில் ஈடுபட்டனர். வீட்டையும், அலுவலகத்தையும் அடித்து நொறுக்கி சூறையாடினர்.இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு போலீஸார் விரைந்துள்ளனர். இந்த மோதல் காரணமாக போடியில் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications