மகிழ்ச்சி கலந்த கவலையோடு இன்று டெல்லியிலிருந்து சென்னை திரும்பும் கருணாநிதி
டெல்லி: தனது மகள் கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு டெல்லியில் முகாமிட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று சென்னை திரும்புகிறார்.
கடந்த 21ம் தேதி தனது துணைவி ராஜாத்தி அம்மாள், பேரன் ஆதித்யா ஆகியோரோடு டெல்லி சென்ற கருணாநிதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
பின்னர் திகார் சிறைக்குச் சென்று மகள் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, கலைஞர் டிவி நிர்வாகி சரத்குமார் ஆகியோரையும் சந்தித்துப் பேசினார்.
இந் நிலையில் ஜாமீன் கோரி கனிமொழி, சரத்குமார் ஆகியோர் தாக்கல் செய்த மனு மீது நேற்று சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. அப்போது, இவர்களுக்கு ஜாமீன் வழங்குவதில் தங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்று நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்தது.
இதனால் திமுக தரப்பு பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தது. கனிமொழிக்கு நேற்றே ஜாமீன் கிடைத்துவிடும் என நம்பியது. இந்த நம்பிக்கையோடு தான் கருணாநிதியுடம் டெல்லியிலேயே தொடர்ந்து தங்கியிருந்தார்.
ஆனால், ஜாமீன் மனு மீதான அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஓ.பி.சைனி, இதன் மீதான தீர்ப்பை வரும் நவம்பர் 3ம் தேதிக்கு ஒத்தி வைத்துவிட்டார். இதனால் திமுக தரப்பு பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தது.
நாளை முதல் நீதிமன்றத்துக்கு தீபாவளி விடுமுறைகள் ஆரம்பிக்கவுள்ளதால் அதற்கு முன் தீர்ப்பு வந்துவிடும் என நினைத்த நிலையில், தீர்ப்பை விடுமுறைகளுக்குப் பின் அடுத்த மாதத்துக்கு நீதிபதி தள்ளி வைத்ததால் கருணாநிதி பெரும் கவலை அடைந்துள்ளதாகத் தெரிகிறது.
இருப்பினும் இந்தப் பயணத்தின் மூலம் காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமருடனான நட்பு புதுப்பிக்கப்பட்ட மகிழ்ச்சியும், கனிமொழிக்கு ஜாமீன் தரலாம் என சிபிஐயின் வாதமும் கருணாநிதிக்கு நிம்மதியையும் தந்துள்ளது.
இதனால் கவலை கலந்த மகிழ்ச்சியோடு இன்றே அவர் சென்னை திரும்புகிறார். அவருடன் ராஜாத்தி அம்மாளும் சென்னை திரும்புகிறார்.
-
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications