மகிழ்ச்சி கலந்த கவலையோடு இன்று டெல்லியிலிருந்து சென்னை திரும்பும் கருணாநிதி
டெல்லி: தனது மகள் கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு டெல்லியில் முகாமிட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று சென்னை திரும்புகிறார்.
கடந்த 21ம் தேதி தனது துணைவி ராஜாத்தி அம்மாள், பேரன் ஆதித்யா ஆகியோரோடு டெல்லி சென்ற கருணாநிதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
பின்னர் திகார் சிறைக்குச் சென்று மகள் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, கலைஞர் டிவி நிர்வாகி சரத்குமார் ஆகியோரையும் சந்தித்துப் பேசினார்.
இந் நிலையில் ஜாமீன் கோரி கனிமொழி, சரத்குமார் ஆகியோர் தாக்கல் செய்த மனு மீது நேற்று சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. அப்போது, இவர்களுக்கு ஜாமீன் வழங்குவதில் தங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்று நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்தது.
இதனால் திமுக தரப்பு பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தது. கனிமொழிக்கு நேற்றே ஜாமீன் கிடைத்துவிடும் என நம்பியது. இந்த நம்பிக்கையோடு தான் கருணாநிதியுடம் டெல்லியிலேயே தொடர்ந்து தங்கியிருந்தார்.
ஆனால், ஜாமீன் மனு மீதான அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஓ.பி.சைனி, இதன் மீதான தீர்ப்பை வரும் நவம்பர் 3ம் தேதிக்கு ஒத்தி வைத்துவிட்டார். இதனால் திமுக தரப்பு பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தது.
நாளை முதல் நீதிமன்றத்துக்கு தீபாவளி விடுமுறைகள் ஆரம்பிக்கவுள்ளதால் அதற்கு முன் தீர்ப்பு வந்துவிடும் என நினைத்த நிலையில், தீர்ப்பை விடுமுறைகளுக்குப் பின் அடுத்த மாதத்துக்கு நீதிபதி தள்ளி வைத்ததால் கருணாநிதி பெரும் கவலை அடைந்துள்ளதாகத் தெரிகிறது.
இருப்பினும் இந்தப் பயணத்தின் மூலம் காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமருடனான நட்பு புதுப்பிக்கப்பட்ட மகிழ்ச்சியும், கனிமொழிக்கு ஜாமீன் தரலாம் என சிபிஐயின் வாதமும் கருணாநிதிக்கு நிம்மதியையும் தந்துள்ளது.
இதனால் கவலை கலந்த மகிழ்ச்சியோடு இன்றே அவர் சென்னை திரும்புகிறார். அவருடன் ராஜாத்தி அம்மாளும் சென்னை திரும்புகிறார்.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications