For Daily Alerts
Just In
கரூர் அருகே அதிமுக பிரமுகருக்கு போலீஸ் வலை வீச்சு
கரூர்: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியக் குழுத் தலைவர் கணேசனை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் லாலாபேட்டையைச் சேர்ந்த ஒன்றியக் குழுத் தலைவராக இருப்பவர் அதிமுகவைச் சேர்ந்த கணேசன். தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலை அடுத்து அதிமுக ஒன்றியச் செயலாளரான முத்துசாமி, ஒன்றிய குழுத் தலைவர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கணேசன் மினிட்ஸ் புத்தகத்தைக் கிழித்தெறிந்து ஒன்றியக் குழு அலுவலகத்தையும் சேதப்படுத்தியதாக கூறப்படுகின்றது. இதன்பேரில் போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து வலைவீசி தேடி வருகின்றனர்.
அதிமுக பிரமுகர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments
English summary
ADMK personal Ganeshan was in the search of police. A case was filed against him for tearing Minutes book.
Story first published: Thursday, October 27, 2011, 12:55 [IST]