For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

14 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா வசதி-தெற்கு ரயில்வே

Google Oneindia Tamil News

நெல்லை: தெற்கு ரயில்வேயில் ரூ. 35 கோடியில் 14 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடந்து வருவதாக சிக்னல் மற்றும் தகவல் தொழில்நுட்ப முதன்மை என்ஜினியர் மனோகர் தெரிவித்தார்.

நெல்லை ரயில் நிலையத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் கண்காணிப்பு கேமராக்கள் 26 இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. இதன் துவக்க விழா நெல்லையில் நடந்தது. மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் கோயல், கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் வெங்கடசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிக்னல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் முதன்மை இன்ஜினியர் மனோகர் கட்டுபாட்டு அறையை திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில் நெல்லையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் முலம் 24 மணி நேரமும் ரயில் நிலைய நிகழ்வுகளை கண்காணிக்கலாம். இதில் பதிவு செய்யப்படும் தகவல்களை 7 நாட்கள் வரை பெறலாம்.

தென்னக ரயில்வேயில் 35 கோடியில் 14 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. இதில் சென்னையில் 7 இடங்களிலும், திண்டுக்கல், மதுரை, சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு உள்ளிட்ட 14 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராவுடன் பயணிகளின உடைமைகளை ஸ்கேனிங் செய்யும் வசதியும் ஏற்படுத்தப்படுகிறது. இந்த வசதி நெல்லையிலும் ஏற்படுத்தப்படும் என்றார்.

மேலும் மதுரை-திண்டுக்கல் இடையே மின்மயாக்கும் பணிகள் முடிவடைந்து விட்டன. மின் நிலையங்கள் அமைக்கப்பட்டவுடன் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்றார்.

English summary
South Railway is planning to fit CCTV cameras in 14 railway stations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X