தூத்துக்குடியில் மழையால் தொழில் பாதிப்பு- 9 லட்சம் டன் உப்பு தேக்கம்

Subscribe to Oneindia Tamil

Salt
தூத்துக்குடி: தூத்துக்குடியில் தொடர் மழை காரணமாக ரூ.பல லட்சம் மதிப்பிலான உப்பு தேக்கமடைந்துள்ளது. இதனால் மாவட்டத்தில் கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் உப்பு உற்பத்தியில் இந்திய அளவில் 2ம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு 1.60 டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 20 லட்சம் டன் உப்பு உற்பத்தியாகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளன. மாவட்டத்தில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான 5 மாதங்களில் உப்பு உற்பத்தி சிறப்பாகவும், அதிகமாகவும் நடக்கும்.

இந்த ஆண்டு வழக்கமான ஆண்டு சராசரி உற்பத்தியை விட கூடுதலாக 2 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் வரை மாவட்டத்தில் 22 லட்சம் டன் அளவுக்கு உப்பு உற்பத்தியாகியுள்ளதாக தெரிகிறது.

கடந்த மாத இறுதியில் இருந்து வடகிழக்கு பருவ மழை துவங்கி கடந்த 15 நாட்களாக மாவட்டத்தில் தொடர்ந்து பருவ மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள 22,000 ஏக்கர் உப்புளங்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் உப்பு பண்டல் போடுதல், வெளி மாநிலங்களுக்கு லாரிகளில் கொண்டு செல்லுதல், உப்பு அரவை, அயோடினேற்றம் உள்ளிட்ட பணிகளும், உப்பு தொழிலின் சார்பு தொழில்களும் கடந்த 10 நாட்களாக நடைபெறவில்லை.

சுமார் 9 லட்சம் டன் உப்பு, உப்பு பண்டல்கள், உப்பளங்கள், மில்கள், குடோன்களில் தேங்கி கிடக்கி்ன்றன. இதனால் தூத்துக்குடி மாவட்டத்திற்கு பல கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+