ஜாமீன் மனு தள்ளுபடி- புதுவை கல்வி அமைச்சர் கல்யாண சுந்தரம் தலைமறைவு
சென்னை: 10ம் வகுப்பு தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள புதுச்சேரி கல்வி அமைச்சர் கல்யாண சுந்தரத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழ்நாடு போலீசாரால் அவர் எந்தநேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து அவர் தலைமறைவாகி விட்டார்.
10ம் வகுப்பு தேர்வை தனக்குப் பதில் வேறு ஒருவரை விட்டு எழுதியதாக புதுச்சேரி கல்வி அமைச்சர் கல்யாண சுந்தரத்தின் மீது விழுப்புரம் போலீஸில் புகார் கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து கல்யாண சுந்தரத்தை கைது செய்ய விழுப்புரம் போலீஸ் நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் கல்யாண சுந்தரம் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த திண்டிவனம் நீதிமன்றம் கல்யாண சுந்தரத்தை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்திருந்தது. இந்நிலையில் அவரது முன்ஜாமீன் மனு செவ்வாய்கிழமை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி பழனிவேலு, கல்யாண சுந்தரத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துவிட்டார்.
இதனையடுத்து கல்யான சுந்தரத்தை கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை நீங்கியுள்ளது. ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் தமிழ்நாடு போலீசாரால் அவர் எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்ப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர் இல்லாததால் ஏமாற்றம்
இதனிடையே கல்யாண சுந்தரம் சென்னையில் இருந்து புதுச்சேரி வருவதாக ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, மரக்காணம் செக் போஸ்டில் போலீசார் காத்திருந்தனர். அப்போது வந்த காரை போலீசார் சோதனை செய்ததில் அமைச்சர் இல்லாததை கண்டு ஏமாந்தனர். காரில் இருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தற்போது கல்யாணசுந்தரம் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. அவர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.
அதிமுக குற்றச்சாட்டு
இதனிடையே தேடப்படும் குற்றவாளியாக உள்ள கல்வி அமைச்சர் கல்யாண சுந்தரம் முதலமைச்சர் ரங்கசாமியின் பாதுகாப்பில்தான் உள்ளார் என்று புதுவை அதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேடப்படும் குற்றவாளிக்கு அதரவு அளித்துள்ள புதுச்சேரி மாநில அரசை டிஸ்மிஸ் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications