முன்னாள் ஜார்க்கண்ட் முதல்வர் மதுகோடாவின் உதவியாளர் சஞ்சய் செளத்ரி துபாயில் கைது
டெல்லி: துபாயில் இருந்த முன்னாள் ஜார்க்கண்ட் முதல்வர் மதுகோடாவின் உதவியாளரான சஞ்சய் செளத்ரி இன்டர்போல் அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டதாக ராஞ்சி சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் மதுகோடா. இவர் பதவியில் இருந்த போது துபாய் உட்பட பல வெளிநாடுகளில் நிலங்கள், சொத்துக்கள் வாங்கி போட்டுள்ளார். அதனை மது கோடாவின் உதவியாளர் சஞ்சய் செளத்ரி என்பவர் பராமரித்து வந்தார். அதற்காக அவர் கடந்த 2006ம் ஆண்டு இந்தியாவில் இருந்து துபாய்க்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். புகையிலை வியாபாரியின் மகனான சஞ்சய் செளத்ரி மதுகோடாவின் உதவியால் பணக்காரர் ஆனார்.
இந்த நிலையில் முன்னாள் ஜார்க்கண்ட் முதல்வர் மதுகோடா பதவியில் இருந்த போது சட்ட விரோதமான பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு மதுகோடா, அவரது உதவியாளர்கள் பினோத் சின்கா, மதுகோடாவின் அமைச்சரவையி்ல் பதவி வகித்த சிலரும் கடந்த 2009ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய சஞ்சய் செளத்ரியை கைது செய்ய ராஞ்சி சிபிஐ அதிகாரிகள் இன்டர்போலின் உதவியை நாடினர். இதனையடுத்து துபாயில் வசித்து வந்த சஞ்சய் செளத்ரியை நேற்று இன்டர்போல் அதிகாரிகள் கைது செய்தனர். இந்த தகவல்களை ராஞ்சி சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக இந்த வழக்கு குறித்து சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிக்கையில், மதுகோடா பதவியில் இருந்தபோது பல நிறுவனங்களிடம் இருந்து சட்ட விரோதமாக பணம் பெற்றதாகவும், வரிஏய்ப்பு, சொத்துக் குவிப்பு ஆகிய செயல்களில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications