Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாமகல்லில் பஸ் 'பாடி பில்டிங்' தொழிற்சாலை: ஜெயலிலதா அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

Jaya at Collectors Meeting
சென்னை: கடலில் மீன்பிடிக்கையில் காணாமல் போகும் மீனவர்களைக் கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் வசதி செய்தி தரப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவி்த்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் நேற்றும், இன்றும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் மாநாடு நடந்தது. மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று ஜெயலலிதா சில அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன் விவரம் வருமாறு,

1. மேட்டுப்பாளையம், திருச்சி, அவினாசி, சத்தியமங்கலம் சாலைகள் மேம்படுத்தப்படும்

2. உக்கடம், ஆத்துபப்பாலத்தில் மேம்பாலங்கள்

3. அரியலூரில் மழையால் சேதமடைந்த 45 கிமீ சாலைகள் சீரமைத்தல்

4. ராமநாதபுரத்தில் நடைமுறையில் உள்ள டோக்கன் அடிப்படையில் ஒரு நாள் மீன் பிடிக்கும் திட்டத்திற்கு பதிலாக ஆழ்கடலில் நாள் முழுவதும் மீன்பிடிக்கும் திட்டம்

5. வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை அருகே மேம்பாலம்

6. சிவகாசி பட்டாசு ஆலைகளில் ஏற்படும் தீவிபத்தில் சிக்குபவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், தீப்புண் சிகிச்சைக்காகவும் சிறப்புப் பிரிவு அமைப்பதுடன், அந்த மருத்துவமனையும் மேம்படுத்துதல்

7. திருவண்ணாமலை மகா தீபத்திற்கு இந்து அறநிலையத்துறை அளித்து வரும் நிதி 50ல் இருந்து 70 சதவீதமாகிறது

8. கடலில் காணாமல் போகும் மீனவர்களைக் கண்டுபிடிக்க ஹெலிகாப்டர்

9. நாமகல்லில் பஸ் கூடு கட்டும் தொழிற்சாலை

10. தூத்துக்குடி மாவட்டத்திற்கு கூடுதல் வசதி, ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்

11. புதிய அரசு விடுதிகளில் சூரிய மின்சக்தி வசதி

12. மத விழாவாகும் சித்ரா பவுர்ணமி

13. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மருதை ஆறு மீது புதிய பாலம்

மாவட்ட ஆட்சியர்களுக்கு விருது

திறம்பட செயல்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா விருது வழங்கி கௌரவித்தார்.

2011ம் ஆண்டு முதல்வரின் தனிப்பிரிவில் குவிந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்த திருச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் முதலாவது பரிசையும், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அகமது 2வது பரிசையும், மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் 3வது பரிசையும் பெற்றனர்.

சிறப்பாக செயல்பட்ட திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முனிநாதனுக்கு முதல்வர் பரிசு வழங்கி பாராட்டினார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாக சேவையாற்றியதற்காக வேலூர் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ஏ.சி. மோகன்தாசுக்கு சான்றிதழ் வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் வெங்கடேசனுக்கு சான்றிதழும், ரூ.25,000ம், வேலூர் மாவட்ட முன்னாள் ஆட்சியர் கோபாலகிருஷ்ணன், திண்டுக்கல் மாவட்ட முன்னாள் ஆட்சியர் வள்ளலார் ஆகியோருக்கு 10 கிராம் தங்கப்பதக்கமும் அளித்து பாராட்டினார்.

குழந்தை தொழிலாளர் ஒழிப்பில் முதலிடம் வகித்தமைக்காக சேலம் மாவட்ட ஆட்சியர் சே.மகரபூஷணுக்கு கேடயம் வழங்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+