தமிழ் மண்ணில் அணு உலை தேவையில்லை: தொல்.திருமாவளவன் பேச்சு
இடிந்தகரை: தமிழ் மண்ணில் அணுஉலை வேண்டாம் என்பதுதான் விடுதலை சிறுத்தை கட்சியின் நிலைப்பாடு. இதுகுறித்து நாடாளுமன்றத்திலும் பேசுவேன், என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.
கூடன்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாக மூட வலியுறுத்தி இடிந்தகரையில் 28 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், "வருங்கால சந்ததியினர் சிறந்த முறையில் பிறந்து வளர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டம் தமிழர்களின் போராட்டம். ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் யுரோனியம் அதிகளவில் கிடைக்கிறது. யுரோனியத்தை விற்பனை செய்யும் எண்ணத்துடன், இந்தியா போன்ற நாடுகளில் அணுஉலைகளை அமைக்கும் திட்டத்தை அந்த நாடுகள் கட்டாயப்படுத்துகின்றன.
அணுஉலை பாதுகாப்பானது அல்லது பாதுகாப்பானது அல்ல என்பதை குறித்து ஆய்வு செய்ய தேவையில்லை. விடுதலை சிறுத்தை கட்சியை பொறுத்த வரை தமிழ் மண்ணில் அணுஉலை வேண்டாம். இதுகுறித்து நாடாளுமன்றத்திலும் பேசுவேன். இது குறித்து கருத்து தெரிவிக்க நாடாளுமன்றத்தில் எனக்கு அனுமதி கிடைக்காத பட்சத்தில் எனது எம்.பி. பதவியை கூட ராஜினாமா செய்வேன்", என்றார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications