கூடங்குளம் போராட்டம்: வைகோ, திருமா, ஜி.கே. மணி,மேதா பட்கர் மீது வழக்கு
கூடங்குளம்: கூடங்குளத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்தி வருபவர்கள் மீதும், அதி்ல் கலந்து கொண்டமைக்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலைவர் ஜி.கே. மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் ரூ.13,500 கோடி செலவில் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ள நிலையில் திடீரென அப்பகுதி மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
கடந்த இரு மாதங்களாக தென்தமிழகத்தில் கூடங்குளம் அணுமின் நிலைய போராட்டம் வலுப்பெற்று வருகிறது. அனுமதி இன்றி போராட்டம் நடத்தப்பட்டு வருவதால் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் மீது தேச துரோக வழக்கு, அரசுக்கு எதிராக செயல்படுதல், அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், பொய் பிரச்சாரம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவின் கீழ் பாதிரியார்கள், போராட்டக் குழு தலைவர், பொதுமக்கள் என பலதரப்பட்ட மக்கள் மீது 15 பிரிவுகளின் கீழ் 77 வழக்குகள் கூடங்குளம் காவல் நிலையத்தில் புதிவு செய்யப்பட்டுள்ளன.
இப்போராட்டத்திற்கு ஆதரவாக களம் இறங்கிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது ஒரு வழக்கும், பாமக தலைவர் ஜி.கே. மணி மீது ஒரு வழக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மீது 2 வழக்குகளும், தேமுதிக எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன் மீது 2 வழக்கும், திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு மீது 1 வழக்கும், வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் மீது 1 வழக்கும், சமூக சேவகி மேதா பட்கர் மீது 1 வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த், நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் உள்ளிட்ட சிலர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.
-
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க












Click it and Unblock the Notifications