நார்வே அறிக்கைக்கு மத்திய அரசு விளக்கம் தர வேண்டும்-விடுதலை சிறுத்தைகள்
சென்னை: கூடங்குளம் பகுதி மக்களின் உணர்வுகளை மதித்து அங்கு அணு மின் உலை அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு முற்றிலுமாக கைவிட வேண்டும், ஏற்கனவே இந்தியாவில் இயங்கி வருகிற அணுமின் உலைகளையும் விரைந்து மூட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயற் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா ஆகியவை சென்னை பெரியார் திடலில் நடந்தது.
விழாவில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு, உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற 185 பேருக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:
உள்ளாட்சித் தேர்தலில் சொந்தச் சின்னம் இல்லாத நிலையிலும், போதிய பொருளாதார வலிமையற்ற நிலையிலும், ஊராட்சி மன்றத் தலைவர்களாகவும், துணைத் தலைவர்களாகவும், ஊராட்சி வார்டு உறுப்பினர்களாகவும் நூற்றுக்கணக்கானோர் வெற்றி பெற்றுள்ளனர். அனைவருக்கும் இக் கூட்டம் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்ததுக் கொள்கிறது.
பரமக்குடி சம்பவம்-ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்:
தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாளான செப்டம்பர் 11 அன்று பரமக்குடியில் தமிழகக் காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான வெறியாட்டத்தில் 6 பேர் படுகொலை செய்யப்பட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளை தமிழக அரசு பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் எனவும், படுகொலையானோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
நார்வே அரசின் அறிக்கை:
தமிழ் இனத்திற்கும், தமிழீழத்திற்கும் எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் இந்திய அரசின் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. அத்துடன் இந்திய அரசின் தமிழின விரோதப் போக்கை உறுதிப்படுத்தியுள்ள நார்வே அரசின் அறிக்கை தொடர்பாக, இந்திய அரசு அனைத்துலக சமூகத்திற்கு உரிய விளக்கம் அளித்திட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகளின் இம்மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கொலைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் மீதான மரண தண்டனையை விலக்குவதற்கு தமிழக அரசு அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்குப் பரிந்துரை செய்ய வேண்டும்.
அணு உலைகளை மூட வேண்டும்:
இந்திய அரசு அணு மின் உலையை நிறுவுவதில் தீவிரம் காட்டுவது ஏற்புடையதாக இல்லை. எனவே, கூடங்குளம் பகுதி மக்களின் உணர்வுகளை மதித்து அணு மின் உலைத் திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும். ஏற்கனவே இந்தியாவில் இயங்கி வருகிற அணுமின் உலைகளையும் விரைந்து மூட வேண்டும் என்பன உள்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications