ஓட்டுக்கு லஞ்சம்... அத்வானி, அருண் ஜெட்லிக்கும் பங்கு! - காங்கிரஸ்
Subscribe to Oneindia Tamil
பாட்னா: ஓட்டுக்குப் பணம் கொடுத்த விவகாரத்தில் பாஜக தலைவர்கள் எல் கே அத்வானி, அருண் ஜேட்லி போன்றவர்களுக்கும் பங்குள்ளதாக காங்கிரஸ் செயலர் சஞ்சய் நிருபம் கூறினார்.
காங்கிரஸ் காரிய கமிட்டி செயலாளர் சஞ்சய் நிருபம் இதுகுறித்து கூறுகையில், "பாராளுமன்றத்தில் வாக்களிக்க பணம் வழங்கிய மோசடியில் பாரதீய ஜனதா மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, அருண் ஜெட்லி ஆகியோருக்கு பங்குள்ளது. விரைவில் அவர்களது பெயர்கள் நிச்சயம் வெளியில் வரும்.
இவ்வழக்கு விசாரணை சரியான திசையில் சென்று கொண்டு இருக்கிறது. இவ்வழக்கில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். அப்போது அதை பாரதீய ஜனதா ஏற்றுக்கொள்ள வேண்டும்," என்றார்.












Click it and Unblock the Notifications