ராணுவ கெடுபிடிகளை மீறி பிரபாகரன் பிறந்தநாள் கொண்டாடிய யாழ். மாணவர்கள்!

ஆனாலும் இந்த நெருக்கடியையும் மீறி யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் பிரபாகரன் பிறந்தநாளை பட்டாசு வெடித்துக் கொண்டி ராணுவத்தை அதிரவைத்துள்ளனர்.
இரு தினங்களுக்கு முன்பே மாவீரர்களை நினைவேந்தியும், பிரபாகரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தும் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து இலங்கை காவல்துறையினர் பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளும், வெளியே ராணுவத்தினரும் படைப் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டு, மாணவர்களை அச்சுறுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.
நேற்று பிரபாகரன் பிறந்தநாள் வாழ்த்துக் கொண்டாட்டங்கள் இடம்பெறும் என எதிர்பார்த்த ராணுவத்தினர் பல்கலைக்கழக வளாகத்தையே சுற்றிச் சுற்றி வந்தனர்.
ஆனாலும் இவர்கள் அனைவரது கண்களிலும் மண்ணைத் தூவும் விதத்திலும் சிங்களத்தை தலைகுனிய வைக்கும் வகையிலும் யாழ் பல்கலைக்கழ மாணவர்கள் நேற்றிரவு பட்டாசு கொளுத்தி பிரபாகரன் பிறந்தநாளைக் கொண்டாடினர்.
பட்டாசு சத்தத்தைக் கேட்ட செய்தியாளர்கள் பல்கலைக் கழகத்தைச் சுற்றி நின்ற படையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவதாக எண்ணி அச்சமடைந்தனர். ஆனால் நேரில் சென்ற பின்னரே உண்மை நிலையை அறிந்து திரும்பினர்.
இன்றைக்கு தமிழீழ தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு பல்கலை வளாகத்தில் மாணவர்கள் எழுச்சி நிகழ்வுகளை மேற்கொள்வர் என்ற எதிர்பார்ப்பில் சிங்கள ராணுவத்தினரும் உளவுப் பிரிவினரும் பல்கலைக்கழகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆயுத அடக்குமுறைகளால் தமது உணர்வுகளை அடக்கிவிட முடியாது என்றும், இவை தமது விடுதலை வேட்கையை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்றும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழர் எமது மதம், தமிழீழம் எமது ஆலயம், தலைவர் பிரபாகரன் எமது கடவுள் என்று பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications