For Quick Alerts
For Daily Alerts
Just In
மேலும் 6 லட்சம் ஏர்டெல் பங்குகளை வாங்கியது பார்தி!
பார்தி ஏர்டெல்லின் பெரும்பான்மை பங்குதாரர் பார்தி டெலிகாம்தான். ஏற்கெனவே 45.58 சத பங்குகளை இந்த நிறுவனத்தில் வைத்துள்ள பார்தி டெலிகாம், மேலும் 98000 பங்குகளை ரூ 3.71 கோடிக்கு பிஎஸ்ஈ மூலம் வாங்கியது. இதன் மூலம் அதன் பங்கு அளவு 45.59 சதவீதமாக உயர்ந்துள்ளது.
என்எஸ்ஈயில் நடந்த மற்றொரு பங்கு பரிவர்த்தனையில், 502000 ஏர்டெல் பங்குகளை ரூ 19 கோடிக்கு வாங்கியுள்ளது பார்தி. இதன் மூலம் ஏர்டெல் நிறுவனத்தில் பார்தியின் பங்கு மதிப்பு 45.60 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் வெளிச்சந்தையில் 14.93 லட்சம் ஏர்டெல் பங்குகளை ரூ 54.51 கோடிக்கு பார்தி வாங்கியது நினைவிருக்கலாம்.
Comments
English summary
Bharti Telecom, the majority stakeholder in private telecom operator Bharti Airtel, on Monday raised it stake marginally with purchase of six lakh shares of the company for Rs 22.71 crore through open market transactions.
Story first published: Wednesday, November 30, 2011, 16:25 [IST]