ஆண் வேடமிட்டு சபரிமலைக்கு வந்த 3 இளம்பெண்கள் பிடிபட்டனர்
திருவனந்தபுரம்: சபரிமலையில் ஆண் வேடமிட்டு தரிசனம் செய்ய வந்த மூன்று இளம்பெண்கள் பிடிபட்டனர். அவர்களை எச்சரிக்கை செய்த போலீசார் பம்பைக்கு திருப்பி அனுப்பி வைத்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா தொடங்கியுள்ளது. இதற்காக இந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமானோர் மாலை அணிந்து வந்து இருமுடி செலுத்தி ஐயப்பசுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த கோவிலுக்கு செல்ல 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே பெண்களை கண்காணிக்க பெண் போலீசார் உள்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பிடிபட்ட பெண்கள்
இருப்பினும் போலீசாருக்குத் தெரியாமல் ஆண்வேடமிட்டும், போலி வயது சான்றிதழுடனும் வரும் பெண்கள் போலீசாரிடம் சிக்கி திருப்பி அனுப்பப்படுகின்றனர். இந்த நிலையில் சரங்குத்தி அருகே வைத்து சன்னிதானத்தை நோக்கி சென்றுக் கொண்டிருந்த ஒரு பெண்ணை சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரித்தனர்.
அப்போது தனக்கு 52 வயது ஆகி விட்டதாக கூறி ஒரு சான்றிதழை போலீசாரிடம் காண்பித்தார். ஆனால் அந்த சான்றிதழ் போலி என விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் பெயர் வள்ளி என்றும், அவருக்கு 35 வயதுதான் ஆகியுள்ளது என்றும் போலீசார் கண்டு பிடித்தனர். செங்கல்பட்டை சேர்ந்த இவர் தனது உறவினர்களுடன் சபரி்மலைக்கு வந்திருந்தார். போலீசார் அவரை எச்சரித்து பம்பைக்கு திருப்பி அனுப்பி வைத்தனர்.
இதே போல சன்னிதானத்தில் ஆண் வேடமணிந்து வந்த ஆந்திராவை சேர்ந்த 2 இளம் பெண்களை போலீசார் பிடித்து திருப்பி அனுப்பினர்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications